சானியா மிர்சா விவாகரத்தை அறிவிக்காதது ஏன் தெரியுமா...?

சானியா மிர்சா - சோயிப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்த புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 29, 2022, 11:11 AM IST
  • சோயிப் மாலிக், பாகிஸ்தான் மாடல் உடன் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.
  • சானியா மிர்சா - சோயிப் மாலிக் இருவரும் மணமுறிவு அறிவிப்பை தள்ளிப்போடுவதாக தகவல்.
சானியா மிர்சா விவாகரத்தை அறிவிக்காதது ஏன் தெரியுமா...? title=

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக திருமணம் உறவில் இருந்தனர். அவருக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற மகனும் உள்ளார். இவர்களின் திருமண வாழ்வு சிறப்பாகவே இருந்துவந்தது.  

சமீப காலங்களாக இருவரின் உறவு குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. சோயிப் மாலிக், பாகிஸ்தான் மாடல் அழகி ஆயிஷா ஓமர் என்பவருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக கூறப்பட்டது. மேலும், அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட போட்டசூட் புகைப்படங்களும் வைராலகின. 

இந்த விவகாரம் அறிந்த பின்னர்தான் சானியா மிர்சா, மாலிக்கை விட்டு பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இருப்பினும் இருவர் தரப்பில் இருந்தும், இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை. 

Sania Mirza

மேலும் படிக்க | அழகி உடன் கணவரின் நெருக்கமான படங்கள் - சானியா மிர்சா விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

இந்நிலையில், பொதுவெளியில் அவர்கள் ஏன் மண முறிவை அறிவிக்கவில்லை என்பது குறித்து புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் பல்வேறு பணிகளில் இணையர்களாக இணைந்து பணியாற்றி வருவதாலும், அதில் ஏதும் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதாலும் அவர்கள் தங்களின் விவாகரத்து அறிவிப்பு தள்ளிப்போட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக," தி மாலிக் மிர்சா ஷோ" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் இவர்கள் இணைந்து நடத்திவருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, விவாகரத்து போன்ற செய்திகளை யாரும் அறிவிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி முழுவதுமாக முடிந்த பின்னர்தான், அவர்களால் மணமுறிவு குறித்து அதிகார்ப்பூர்வமாக அறிவிக்க இயலும் என்று தெரிகிறது. 

இருப்பினும், சானியா மிர்சா இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக பல்வேறு பதிவுகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்கள், ஊடகங்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் மணமுறிவு குறித்த சந்தேகத்திற்கும் அவை வலுவூட்டும் வகையில் உள்ளது. சமீபத்தில் அவர்,"உங்களின் இதயம் கனமாகி போகும் தருணங்களுக்கு பின், சற்று விலகி இருங்கள்" என்ற இன்ஸ்டாகிராம் பதிவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

Sania Mirza

சானியா மிர்சா - சோயிப் மாலிக் ஆகியோர் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடி என்பதால், அவர்களின் பிரிவை ரசிகர்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இருப்பினும், மண உறவில் கசப்புடன் வாழ்வதற்கு பதில் பிரிவதும் ஒருவிதத்தில் நன்மைதான் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சானியா மிர்சா - சோயிப் மாலிக் ஜோடிக்கு, இஷான் மிர்சா மாலிக் என்ற 4 வயது மகன் இருப்பது நினைவுக்கூரத்தக்கது. 

மேலும் படிக்க | இருக்குற பிரச்சனையில இப்போ இது வேறயா ? சமந்தா செய்த அடுத்த செயல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News