அழகி உடன் கணவரின் நெருக்கமான படங்கள் - சானியா மிர்சா விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

சானியா மிர்சா, சோயிப் மாலிக் விவாகரத்து குறித்து வதந்திகள் பரவிவரும் நிலையில், அவர்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு மாடல் அழகி ஒருவர்தான் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Nov 11, 2022, 12:04 PM IST
  • 12 ஆண்டுகளாக சோயிப் மாலிக் - சோனியா மிர்சா திருமண உறவில் இருக்கின்றனர்.
  • சோயிப் மாலிக் மாடல் அழகியுடன் எடுத்த மிரட்டலான போட்டோசூட்டால் பிரச்சனை எழுந்தது.
அழகி உடன் கணவரின் நெருக்கமான படங்கள் - சானியா மிர்சா விவாகரத்துக்கு இதுதான் காரணமா? title=

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக திருமணம் உறவில் இருந்தனர். அவருக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற மகனும் உள்ளார். இவர்களின் திருமண வாழ்வு சிறப்பாகவே இருந்துவந்தது.  

சமீப காலங்களாக இருவரின் உறவு குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகின்றன. அதாவது, இருவருக்கும் மணமுறிவு ஏற்பட்டுவிட்டதாகவும், அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் மாலிக்கின் நண்பர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர். 

மேலும், இந்த வதந்திகளுக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளும், ஸ்டோரிகளும்தான். ஒருமுறை, தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, "கடினமான நாள்கள்" என குறிப்பிட்டிருந்தார். மேலும், சமீப நாள்களாக இன்ஸ்டாகிராமில் சோயிப் மாலிக்கின் புகைப்படங்களை காணவே முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. 

தற்போது, இவர்களின் மணமுறிவு விவகாரத்து குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, இவருக்கும் இடையேயும் பிரச்சனைக்கான காரணமாக இருப்பவர் பாகிஸ்தான் மாடல் ஆயிஷா உமர் என்பவர்தான் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | நான் நடிப்பதே இல்லை - கலகத் தலைவன் உதயநிதி ஸ்டாலின்

சமீபத்தில், சோயிப் மாலிக் உடன், ஆயிஷா எடுத்துக்கொண்ட மிரட்டலான போட்டோசூட் தான் இவர்களுக்கு இடையிலான புகைச்சலுக்கு காரணம் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், சோயிப் மாலிக் ஆயிஷா உடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஆயிஷா உடனான  புகைப்படங்கள் வெளியானபோது, பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்று,"சானிய மிர்சா இந்த புகைப்படங்களுக்கு என்ன சொன்னார்" என கேட்டதற்கு சோயிப் மாலிக் மலுப்பலாக பதிலளித்தார். இதைத் தொடர்ந்துதான், மாலிக் ஆயிஷாவுடன் உறவில் இருப்பது சானியா மிர்சாவுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. 

இருப்பினும், இவர் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை, இந்த விஷயத்தில் இருவரும் மௌனம் காத்து வருகின்றனர். இதுகுறித்து இருவரும் சரியான நேரத்தில் அறிவிக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது. 

முன்னதாக, மாலிக், சானியா மிர்சா ஆகியோர் சமீபத்தில் துபாய்க்கு சென்று, அங்கு அவர்களின் மகன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். அதன் புகைப்படங்களை மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களில் சானியா மிர்சாவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிக்க | ஆடை சர்ச்சை...வீடியோவில் பொய் சொன்ன சதீஷ் - பதிலடி கொடுத்த தர்ஷா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News