விராட் கோலி இடத்திற்கே ஆப்பு வைக்கும் ஷ்ரேயாஸ்... இந்தியாவின் நம்பர் 3 இடம் யாருக்கு?

Shreyas Iyer Or Virat Kohli: இந்திய அணியின் நம்பர் 3 பேட்டர் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் யாரை இந்திய அணி அந்த இடத்தில் வாய்ப்பளிக்கும் என்பதை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 25, 2023, 11:23 AM IST
  • விராட் கோலி நம்பர் 3 இடத்தில் சாதனை அளப்பரியது.
  • இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயரும் தற்போது நம்பர் 3இல் சிறப்பாக விளையாடுகிறார்.
  • ஷ்ரேயாஸ் ஐயரால், இஷான் கிஷன், சூர்யகுமார் ஆகியோரும் அணியில் இடம்பிடிக்க இயலாது.
விராட் கோலி இடத்திற்கே ஆப்பு வைக்கும் ஷ்ரேயாஸ்... இந்தியாவின் நம்பர் 3 இடம் யாருக்கு? title=

Shreyas Iyer Or Virat Kohli: உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதசேம், நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் தொடரை நடத்தும் இந்திய அணியும் இதில் பங்கேற்க உள்ளது

முரட்டு ஃபார்மில் இந்திய அணி 

ஒவ்வொரு அணிகளும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒருமுறை மோதிக்கொள்ளும். அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். கோப்பை வெல்லும் அதிக வாய்ப்பு உள்ள அணிகளுள் ஒன்றாக இந்தியா காணப்படுகிறது. சொந்த மண்ணில் நடப்பது ஒரு சாதகம் என்றாலும் ஆசிய கோப்பையில் சாம்பியன், தற்போதைய ஆஸ்திரேலிய தொடரை கைப்பற்றியது என இந்திய அணி முரட்டு ஃபார்மில் காணப்படுகிறது.

உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்கு வீரர்களுக்கு தேர்ந்தெடுப்பது தான் கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவருக்கும் முன் இருக்கும் பெரிய தலைவலியாகும். ஏனென்றால், மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோருக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது எனலாம்.

மேலும் படிக்க | ஷ்ரேயாஸ் ஐயர் மிரட்டல் சதம்... உலகக் கோப்பையில் இனி இந்த முக்கிய வீரருக்கு வாய்ப்பே இல்லை

மிரட்டும் மிடில் ஆர்டர்

இந்தியாவின் டாப்-ஆர்டர் பேட்டர்களான ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் தேர்வாவதில் எந்த மாற்றமும் இருக்காது. மறுபுறம், மிடில் ஆர்டரில் இரண்டு வீரர்களை மட்டுமே கொண்டுவர முடியும் சூழலில், இந்திய அணி பெரும்பாலும் அனுபவம் காரணமாக ஷ்ரேயாஸ், கே.எல். ராகுல் ஆகியோரையே தேர்வு செய்யும் என தெரிகிறது. 

விராட் அல்லது ஷ்ரேயாஸ்

இருந்தாலும், ஷ்ரேயாஸ் ஐயரை நான்காவது வீரராக களமிறக்குவதற்கு பதில், மூன்றாவது வீரராக களமிறக்கினால் அவரால் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வர முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, அவர் சுழற்பந்துவீச்சை அசால்ட்டாக சமாளிப்பார் என்பதால் மிடில் - ஓவர்களில் அதிரடி காட்டவும், செட்டிலாகி விளையாடவும் அது வாய்ப்பு அளிக்கும் என பலரும் நினைக்கின்றனர். 

ஆனால், விராட் கோலி பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு மூன்றாவது வீரராக களமிறங்கி பெரும் வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். நம்பர் 3 இடத்தில் விராட் செய்த சாதனைகள் அளப்பரியது. மேலும், உலகத் தர பேட்டரான விராட் கோலிக்கு அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பளிப்பதே சாம்பியனாக நினைக்கும் அணிக்கு வலு சேர்க்கும் என ஒரு தரப்பு கூறுகின்றனர். 

அந்த வகையில், விராட் கோலி நம்பர் 3 செய்ததை இங்கு கூற வேண்டும் என அவசியமில்லை. ஏனென்றால், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் இந்திய அணியின் இத்தகைய நிலைக்கு விராட் கோலி அளித்த பங்களிப்பை இந்த ஒரு பதிவில் சொல்லிவிட இயலாது. ஆனால், அவ்வப்போது 3ஆவது வீரராக  களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தில் செய்த பெர்மான்ஸ்களை இங்கு காண முடியும். 

நம்பர் 3இல் ஷ்ரேயாஸ் ஐயர்

ஒருநாள் வடிவத்தில், ஷ்ரேயாஸ் ஐயர் 3ஆவது இடத்தில் களமிறங்கிய கடைசி 11 இன்னிங்ஸ்கள் - 9 (27), 88 (70), 65 (63), 54 (57), 63 (71), 44 (34), 80 (76), 49 (59 ), 82 (102), 3 (8), 105 (90) என தொடர்ச்சியான திறனை வெளிப்படுத்தியிருக்கிறரார்.  அதாவது, இந்த 11 இன்னிங்ஸ்களில், ஷ்ரேயாஸ் ஐயர் 58.36 சராசரி மற்றும் 97.71 ஸ்ட்ரைக் ரேட் உடன் 642 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்கும்போதே, பேட்டர்கள் எந்த வரிசையில் இறங்கி விளையாடவும் தயாராக இருக்க வேண்டும், இது ஒன்றும் ஸ்கூல் இல்லை வரிசையாக செல்ல என கூறியிருந்தார், கேப்டன் ரோஹித் சர்மா. இது பலருக்கும் வியப்பாக இருந்த நிலையில், ஒருவேளை உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் மூன்றாவது வீரராக ஷ்ரேயாஸ் ஐயரையும் அணி நிர்வாகம் முயற்சித்து பார்க்க வாய்ப்புள்ளது. நாளை மறுதினம் நடக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கூட இதனை பரிசோதித்து பார்க்க வாய்ப்புள்ளது. 

நேற்று ஆட்ட நாயகன் விருதை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது இடத்தில் இறங்குவது குறித்து கூறுகையில்,"விராட் கோலி தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவர் அந்த இடத்தை (நம்பர் 3) சீல் செய்துவிட்டார். அவரிடம் இருந்து அந்த இடத்தை என்னால் பறிக்க முடியாது, ஆனால் எனக்கு கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறங்கி விளையாட என்னால் இயலும், அணியின் தேவையின் பொருட்டு விளையாடுவேன்" என்றார். 

மேலும் படிக்க | அஸ்வினுக்கு எதிராக புது அவதாரம் எடுத்த வார்னர்... ஆனாலும் சனி அவர் பக்கம் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News