ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட காதல் ஜோடி! அரை நிர்வாணத்துடன் காலில் விழ வைத்து தண்டனை!

காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததோடு, இவர்களது திருமணததில் கலந்து கொண்டவர்களை அரை நிர்வாணத்துடன் காலில் விழ வைத்து தண்டனை வழங்கிய கொடுரம் அரங்கேறி உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 3, 2023, 05:11 PM IST
  • திருமணத்தில் பங்கேற்ற உறவினர் மற்றும் நண்பர்களை ஊரை விட்டு ஒதுக்கி விட்டதாக புகார்.
  • சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததால் தண்டனை.
  • மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு.
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட காதல் ஜோடி! அரை நிர்வாணத்துடன் காலில் விழ வைத்து தண்டனை! title=

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்தை சேர்ந்த சுமன்(28) என்பவர்  அதே சமூகத்தை சேர்ந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து இரு விட்டாரின் சம்மதத்துடன் கடந்த 16ஆம் தேதி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுடைய சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி  காதல் திருமணம் செய்ததால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட  தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். 

அந்த மனுவில், நாங்கள் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம். இந் நிலையில் சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததால், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் எங்கள் திருமணத்தில் பங்கேற்ற தங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்களை ஊரை விட்டு ஒதுக்கி விட்டதாகவும், ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் அபராத தொகை கட்ட வேண்டும், சமூக தலைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அவதாரம் கட்டி,  தலைவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | காதலியுடன் போனில் பேசிய நண்பன்... ஆணுறுப்பை வெட்டி கொடூர கொலை!

மேலும் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி தங்களை சாணி கரைத்து சுத்தப்படுத்த வேண்டும். மேலும் ஊரில் எந்த நிகழ்விலும் பங்கேற்க கூடாது, கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்ததால் பல லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என அவர்கள் மிரட்டதாகவும் கூறுகின்றனர்.  எனவே ஊரை விட்டு ஒதுக்கிய அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து புகார் மனுவில் தெரிவித்துள்ள தலைவர் கணேசன் அவர்களிடம் கேட்ட போது, இதுபோன்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர்கள் நடத்தை மற்றும் பேச்சு பிடிக்காததால் தாங்கள் அவர்களை விட்டு விலகி விட்டதாகவும், மேலும் காலில் விழும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, அபராதம் யாரையும் கட்ட சொல்லவில்லை எனவும் வயதில் மூத்தவன் என்பதால் தன்னிடம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், ஏதேனும் புகார்கள் தெரிவிப்பார்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்ற கள்ளக் காதலி: மதுரையில் கொடூரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News