அதி தீவிர புயலாகிறது டவ் தே, 5 நாட்களுக்கு கன மழை: எச்சரிக்கும் IMD

அரேபிய கடலில் நிலைகொண்டுள்ள டவ்-தே புயல் அடுத்த 6 மனி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 15, 2021, 02:33 PM IST
  • டவ்-தே புயல் அடுத்த 6 மனி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடையும்-வானிலை ஆய்வு மையம்.
  • தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கனமழைக்கான வாய்ப்பு.
  • மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
அதி தீவிர புயலாகிறது டவ் தே, 5 நாட்களுக்கு கன மழை: எச்சரிக்கும் IMD title=

சென்னை: அரேபிய கடலில் நிலைகொண்டுள்ள டவ்-தே புயல் அடுத்த 6 மனி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம், கேரளா உட்பட ஐந்து மாநிலங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

டவ் தே புயல் குறித்து தமிழக முதல்வர் வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிலச்சரிவு போன்ற இயற்கை பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரேபிய கடலில் நேற்று முதல் நிலைகொண்டுள்ள டவ் தே புயல் (Cyclone Tauktae) விரைவில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கன முதல் அதி கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. இன்றைய வானிலையைப் பொறுத்தவரை தேனி, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், அரேபிய கடலில் புயல் நிலைகொண்டுள்ள சூழலில், தமிழகத்தில் (Tamil Nadu) இன்று காலை முதல் பத்து மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. மழையின் தீவிரம் காரணமாக, குன்னூர் மற்றும் ஊட்டி இடையிலான சாலையில் சில இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

ALSO READ: Cyclone Tauktae: உருவானது ‘டவ் தே’புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை

இந்த மாவட்டங்களில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக கத்திரி வெயிலிலும் சில இடங்களில் குளிர் நிலவி வருகிறது.  

நாளை முதல் 19 ஆம் தேதி வரை நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 18 ஆம் தேதி டவ்-தே புயல் குஜராத் கடல் பகுதியை அடைந்து தெற்கு பாகிஸ்தான் கடல்பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரேபிய கடல் கடற்கரை, தெற்கு தமிழக கடற்கரையில் உள்ள மீனவர்கள் (Fishermen) கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், இன்று அரேபிய கடலில் அதி தீவிர புயல் உருவாகலாம் என்பதால், கடலில் உள்ளவர்கள் உடனடியாக அருகிலுள்ள துறைமுகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்குமாறு இந்திய கடலோர காவல்படை மீன்வளத்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், பைபர் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ALSO READ: தமிழகத்தில் கனமழைக்கான எச்சரிக்கை: நாளை தாக்கும் டவ்-தே புயல், எங்கு கரையை கடக்கும்?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News