Price of War: தொட்டில்களில் எதிரொலிக்கும் ரஷ்ய படையெடுப்பின் தாக்கங்கள்

Russia - Ukraine War: உக்ரைனில் காணப்படும் காலி ஸ்ட்ரோலர்கள் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் போது கொல்லப்பட்ட குழந்தைகளைக் குறிக்கின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 19, 2022, 12:35 PM IST
  • ரஷ்ய படையெடுப்பின் தாக்கங்கள்
  • தொட்டில்களில் எதிரொலிக்கும் போரின் விளைவு
  • பெரியவர்களால் முன்னெடுக்கப்படும் போரின் விளைவுகளை எதிர்கொள்ளும் குழந்தைகள்
Price of War: தொட்டில்களில் எதிரொலிக்கும் ரஷ்ய படையெடுப்பின் தாக்கங்கள் title=

Russia - Ukraine War: ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு மத்தியில், ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் நாட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவுகூரும் வகையில் வெள்ளியன்று எல்விவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ஏராளமான காலியான ஸ்ட்ரோலர்கள் (குழந்தைகளை அழைத்துச் செல்ல பயன்படும் தள்ளுவண்டி) அணிவகுத்து நின்றன.

ரஷ்யா-உக்ரைன் மோதல்
பெரியவர்கள் போரை அறிவிக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள்தான் போராடி இறக்க வேண்டும். போருக்குப் பின் வரும் இன்னல்கள், துக்கம் மற்றும் வெற்றிகளை இளைஞர்கள்தான் பெற வேண்டும். 

இந்த வார்த்தைகள், தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா படையெடுப்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் கூறிய புகழ்பெற்ற வரிகளை நினைவுபடுத்துகிறது. இந்த  கசப்பான உண்மையை வெளிப்படுத்தும் புகைப்படம் இது.

WORLD
(புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

ரஷ்யாவின் 'இராணுவ நடவடிக்கை'
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிப்ரவரி 24 அன்று உக்ரேன் மீது "இராணுவ நடவடிக்கைக்கு" உத்தரவிட்டார். உக்ரைனில் தனது நடவடிக்கைகள் சிறப்பு ராணுவ நடவடிக்கைகள் என்றும், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

இருப்பினும், இந்த மோதல்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்யா ஷெல் மற்றும் குண்டுவீச்சு காரணமாக கொல்லப்பட்ட குழந்தைகள் உட்பட மக்களுடன் இறப்பு மற்றும் அழிவை ஏற்படுத்தியது.

வெள்ளியன்று (மார்ச் 18) ல்விவ் நகரின் மத்திய சதுக்கத்தில் ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர் நாட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளை நினைவுகூரும் வகையில் ஏராளமான வெற்று ஸ்ட்ரோலர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: அமைதி உடன்படிக்கையை எதிர்நோக்கும் உக்ரைன்!

வெற்று ஸ்ட்ரோலர்கள் குழந்தைகளைக் குறிக்கின்றன
உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, எல்விவ் நகர மண்டபம் 109 ஸ்ட்ரோலர்கள் அல்லது பிராம்களை நேர்த்தியான வரிசைகளில் வைத்தது - போரின் தொடக்கத்திலிருந்து கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தைகளும் நினைவுகூரப்பட்டார்கள்.

WORLD

மோதலின் சோகமான உண்மை
தலா ஒரு நீல நிற குழந்தை தள்ளுவண்களில் இரண்டு டெட்டி பியர் பொம்மைகள் போடப்பட்டன. பெஞ்சில் அமர்ந்திருந்த சிறுமி ஒரு சிறிய உக்ரேனியக் கொடியை வைத்திருந்தாள்.

மேற்கு உக்ரேனின் எல்விவ், போரின் முன்னணியில் இருந்து தஞ்சம் தேடி நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்களை ஈர்த்துள்ளது.

WORLD

(புகைப்படம்: AFP)

'உங்கள் குழந்தைகளை நினைவில் வையுங்கள்'
"உங்கள் குழந்தைகளும் இதுபோன்ற தள்ளுவண்டிகளில் அமர்ந்திருந்ததை நினைவு கொள்ளுங்கள். போதும் அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று ரஷ்ய தாய்மார்களுக்கு நினைவுபடுத்தும் போரின் சோக வெளிப்பாடாக இந்த தள்ளுவண்டிகள் இருக்கின்றன.

"இறந்துவிட்ட குழந்தைகளின் இந்த ஸ்ட்ரோலர்கள், போரின் உக்ரத்தில், வெந்து மடிந்த பச்சிளம் குழந்தைகளுடையவை. இவை, போரின் பக்க விளைவுகளை நேரடியாக காட்டுகிறது.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News