Best Investment Schemes For Women Saving: பெண்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இன்று, வீட்டை நிர்வகிப்பதுடன், குடும்பத்தின் நிதி நெருக்கடியின் போது கைக்கு வரும் தங்கள் சேமிப்பின் நிதியையும் பெண்கள் பராமரிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்கள் இந்த பணத்தை வீட்டில் வைத்திருப்பார்கள்.  இதில் அவர்களுக்கு வட்டி எதுவும் கிடைக்காது. இந்தப் பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்தால் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும். அந்தவகையில் இக்கட்டுரையில், இதுபோன்ற சில அரசு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் மிக சிறிய தொகையை முதலீடு செய்யலாம். இதற்கு நிலையான வட்டியும் கிடைக்கிறது. இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் உங்கள் பணம் அதிகரிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் - Mahila Samman Savings Certificate (MSSC):
பெண்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த திட்டம் தான் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம். பெண்கள், தங்கத்தை மட்டுமே பாதுகாப்பான முதலீடாக கருதக் கூடாது மற்ற திட்டங்களிலும் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது தான் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம். கடந்த 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மகிளா சம்மான் சேமிப்பு திட்டம், பெண்களுக்கான குறுகிய கால சேமிப்பு திட்டம். இவை மொத்த வைப்புத்தொகைகள், இதில் ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாம். அதன் மெச்சூரிட்டி காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்துக் கொள்ளலாம். அதேபோல் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.


மேலும் படிக்க | இனி பணம் எடுக்க ஏடிஎம் செல்ல வேண்டாம்! வீடு தேடி பணம் வந்து சேரும்!


மகிளா சம்மான் சேமிப்பு அட்டை:
இந்த திட்டம் தபால் நிலையத்தால் நடத்தப்படும் சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டம் தொடர்பாக அஞ்சல் அலுவலகத்தில் முழு தகவலையும் பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெறும் பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.7 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில், ஓராண்டுக்குப் பிறகு பெண் தனது முதலீட்டில் 40 சதவீதத்தை திரும்பப் பெறலாம். எனினும் இந்தத் திட்டத்தில் இரண்டு வருடங்கள் முதலீடு செய்தால் பெண்கள் பலன்களைப் பெறலாம்.


சுகன்யா சம்ரித்தி யோஜனா - Sukanya Samriddhi Yojana (SSY):
சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY) திட்டம் பெண்களுக்காக மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் திட்டமாகும். பெண் குழந்தைகளை தன்னிறைவு கொண்டவர்களாக மாற்ற மத்திய அரசின் மோடி அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட் பெண் குழந்தைகளுக்கு அந்த குழந்தையின் பெயரிலேயே கணக்கு தொடங்கி சேமிக்க முடியும். இந்தத் திட்டத்தில் முதலீடு 15 ஆண்டுகளுக்கு செய்யப்பட வேண்டும், மேலும் திட்டம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும். சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம்.


மேலும் படிக்க | ஆன்லைன் மூலம் கடன் வாங்க போறீங்களா? இந்த விஷயங்களில் கவனம் தேவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ