7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகத்தான நற்செய்தி வந்துள்ளது. ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு கிடைத்துள்ளது. அகவிலைப்படியில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 1, 2024 முதல் ஊழியர்களுக்கு 50 சதவீத அகவிலைப்படி கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாத AICPI இன்டெக்ஸ் தரவுகளிலிருந்து இது தெளிவாகியுள்ளது. இருப்பினும், டிசம்பர் எண்கள் இன்னும் வரவில்லை. குறியீட்டில் நல்ல உயர்வு இருந்தால், அகவிலைப்படி 51 சதவீதமாகவும் இருக்கலாம். ஆனால், தற்போது வரை வந்துள்ள தரவுகளிலிருந்து 50 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது அகவிலைபப்டியில் 4 சதவீதம் அதிகரிப்பு இருப்பது உறுதி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

AICPI குறியீட்டிலிருந்து தெளிவான விவரம்


மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி கணக்கிடுவதற்கான தரவு வெளிவந்துள்ளது. நவம்பர் 2023க்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் (AICPI Index) எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறியீட்டில் 0.7 புள்ளிகள் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மொத்த அகவிலைப்படி மதிப்பெண் 0.60 சதவீதம் அதிகரித்து 49.68 சதவீதமாக உள்ளது. இனி வரும் நாட்களில் மத்திய ஊழியர்களுக்கு 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. அதாவது அகவிலைப்படி (Dearness Allowance) 4 சதவீதம் அதிகரிக்கப் போகிறது என்பது தெளிவாகிறது.


ஏஐசிபிஐ குறியீட்டில் நிகழ்ந்த மாற்றம் என்ன?


 


மேலும் படிக்க | வங்கிக்கணக்கு இருக்கா? முக்கிய செய்தி!! ரிசர்வ் வங்கி அளித்துள்ள புதிய வழிகாட்டுதல்களை தெரிந்துகொள்ளுங்கள்


50 சதவிகிதத்திற்குப் பிறகு அகவிலைப்படி 0 ஆகிவிடும்


மத்திய ஊழியர்களுக்கு ஜனவரி 2024 முதல் 50 சதவீத DA கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. ஆனால், இதற்குப் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். அதாவது அதற்குப் பிறகு அகவிலைப்படியின் கணக்கீடு 0 முதல் தொடங்கும். 50 சதவிகித அகவிலைப்படியின் தொகை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அதாவது ஒரு ஊழியரின் ஊதியக் குழுவின்படி அவரது குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 18,000 ரூபாயாக இருந்தால், அதில் 50% அதாவது 9,000 ரூபாய் அவருடைய சம்பளத்துடன் சேர்க்கப்படும்.


அகவிலைப்படி எப்போது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுகிறது?


புதிய ஊதியக்குழு அமலுக்கு வரும் போதெல்லாம், ஊழியர்கள் பெறும் டிஏ அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படுகிறது. விதிப்படி, ஊழியர்கள் பெறும் 100 சதவீத டிஏவை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், ஆனால் இது சாத்தியமில்லை. நிதி நிலைமை குறுக்கே வரும். ஆனால், இந்த விதியும் 2016ம் ஆண்டுதான் அமலுக்கு வந்தது. அதற்கு முன், 2006ல், ஆறாவது ஊதியக்குழு வந்த போது, ஐந்தாவது ஊதியக்குழுவில், டிசம்பர் வரை, 187 சதவீதம் டிஏ (DA), வழங்கப்பட்டு வந்தது. முழு அகவிலைப்படியும் அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்பட்டது. எனவே ஆறாவது ஊதிய விகிதத்தின் குணகம் 1.87 ஆக இருந்தது. பின்னர் புதிய ஊதியக்குழு மற்றும் புதிய தர ஊதியமும் உருவாக்கப்பட்டது. ஆனால், அதை வழங்க மூன்று ஆண்டுகள் ஆனது. 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி, அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும்போது, அகவிலைப்படி 0 ஆக குறைக்கப்பட்டு, அகவிலைப்படியின் தொகை அடிப்படை சம்பளத்துடன் (Basci Salary) சேர்க்கப்படும்.  


இதற்கான அறிவிப்பு எப்போது வரும்? 


இதுவரை இருந்த முறைப்படி, ஜனவரி முதல் ஜூலை மாதங்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் மாதம் அரசால் அறிவிக்கப்படும். அதேநேரம், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி அக்டோபரில் அறிவிப்பு வெளியிடப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. 


மேலும் படிக்க | MNREGA திட்டம்... இனி சம்பளம் பெற ஆதார் அவசியம்... மத்திய அரசு உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ