7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் விரைவில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியைப் பெறுவார்கள். அரசு மீண்டும் ஒரு பெரும் தொகையை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கக்கூடும். இன்னும் சில நாட்களில், 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை குறித்து அரசாங்கம் முடிவெடுக்கக்கூடும். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை செயலாளருடன் விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை 18 மாத கால டிஏ நிலுவைத் தொகை குறித்து முடிவெடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த முறை அரசு மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு ஊழியர்களின் கணக்கில் 2 லட்சம் ரூபாய் வரும்


கொரோனா காலத்தில் ஏற்பட்ட அசாத்திய நெருக்கடியில், அப்போதைய நிதிநிலையை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட 18 மாத கால அகவிலைப்படியின் நிலுவைத் தொகை குறித்து ஊழியர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் இதுவரை அரசுடன் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. எனினும், கொரோனா பெருந்தொற்று குறையத் தொடங்கியதுமுதல், ஊழியர்களுக்கு டிஏ முடக்கம் நீக்கப்பட்டு, டிஏ உயர்வு கிடைத்துள்ளதுடன், நிலுவைத் தொகையும் கணக்கில் வந்துள்ளது. ஆனால், 18 மாதங்கள் முடக்கப்பட்ட நிலுவைத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இன்னும் வரவில்லை. 


தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளில் இதற்கான முடிவு கெடுக்கப்பட்டு, ஊழியர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படால், ஊழியர்களின் கணக்கில் பெரும் தொகை வரும். இதனால் அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | 7th Pay Commission: 2023-ல் ஊழியர்களுக்கு ஜாக்பாட், 5% அதிகரிக்குமா டிஏ? 


ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? 


அகவிலைப்படி அரியர் தொகையை அளிக்க அரசு ஒப்புக்கொண்டால், ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு தொகை வரும் என்பதைப் பற்றி பார்க்கலாம். நேஷனல் கவுன்சில் ஆஃப் ஜேசிஎம் (பணியாளர்கள் தரப்பு) ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, வெவ்வேறு ஊழியர்களுக்கு வெவ்வேறு அளவிலான நிலுவைத் தொகைகள் கிடைக்கும். 


- லெவல்-1 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும்.


- ​​லெவல்-13 (7வது சிபிசி அடிப்படை ஊதிய அளவு ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900) அல்லது லெவல்-14 (ஊதிய அளவு) ஊழியர்களுக்கு 1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.


எனினும், இதுவரை இந்தத் தொகை பற்றியோ அல்லது தவணைகள் பற்றியோ அரசு தெளிவுபடுத்தவில்லை. அகவிலைப்படி அரியர் தொகையை அரசாங்கம் சில தவணைகளில் வெளியிடக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


18 மாத நிலுவைத் தொகை குறித்த நம்பிக்கை இன்னும் உள்ளது


ஒருபுறம், இந்த விஷயத்தில் அரசு எந்த நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் ஊழியர்கள் இது பற்றி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு மீது நம்பிக்கை கொண்டுள்ள ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அரசு ஊழியர்கள், தற்போது அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசு விரைவில் இது குறித்து முடிவெடுத்து, ஊழியர்களின் நலன் கருதி இந்தத் தொகையை விரைவில் அளிக்கக்கூடும் என நம்பிக்கை வைத்துள்ளனர்.


மேலும் படிக்க | 7th Pay Commission: மார்ச்சில் டிஏ உயர்வு? சம்பளம் இவ்வளவு உயருமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ