7th pay Commission: 3 தவணைகளில் கிடைக்கவுள்ளதா டிஏ அரியர் தொகை? அப்டேட் இதோ

7th pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. விரைவில் அவர்களது ஒரு முக்கிய கோரிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 29, 2022, 05:29 PM IST
  • 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரியர் தொகை கிடைக்குமா?
  • நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பாக விரைவில் விவாதிக்கப்படும்.
  • மூன்று தவணைகளில் வழங்கப்படலாம்.
7th pay Commission: 3 தவணைகளில் கிடைக்கவுள்ளதா டிஏ அரியர் தொகை? அப்டேட் இதோ title=

7வது சம்பள கமிஷன் டிஏ நிலுவைத் தொகை சமீபத்திய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. 16 மாதங்களாக சிக்கியுள்ள மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்து நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து நீண்ட நாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பாக 3 முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும், ஊழியர்களின் நிலுவைத் தொகை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரியர் தொகை கிடைக்குமா? 

இது குறித்து மீண்டும் ஒரு முடிவு எடுக்கப்படும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அமைச்சரவை செயலாளருடனான உரையாடலில் இது குறித்தும் பேசப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 18 மாத நிலுவைத் தொகையை அரசாங்கம் 3 தவணைகளில் செலுத்தக்கூடும் என்று எங்கள் இணை இணையதளமான ஜீ பிசினசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 18 மாத அரியர் தொகையை அரசாங்கம் 3 தவணைகளில் அளிக்கக்குடும் எனவும் கூறப்படுகின்றது. இந்த தொகையின் முதல் தவணையை ஊழியர்கள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெறக்கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது. 

நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பாக விரைவில் விவாதிக்கப்படும் 

அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவது குறித்து அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், ​​2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவதற்கு ஒப்புதல் கிடைக்கக்கூடும். 

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! 18 மாத DA நிலுவைத் தொகை குறித்து சூப்பர் அப்டேட்! 

தொற்று நிலைமை சற்று சீரானவுடன், 2021 ஆம் ஆண்டில், அரசாங்கம் ஒரே நேரத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை 11 சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் இதற்கு முன், ஜனவரி 2020, ஜூலை 2020, ஜனவரி 2021 ஆகிய மூன்று தவணைகள் கொரோனா காலத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஊழியர்கள் இதற்கான கோரிக்கை விடுத்தும், அரசு இதைத் தர மறுத்துவிட்டது.

மூன்று தவணைகளில் வழங்கப்படலாம்

ஊழிர்களின் டிஏ நிலுவைத் தொகை வழங்கப்படும் என மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சரவைச் செயலர் கூட்டத்தில் இந்தப் பிரச்னையை முன்வைப்பார்கள். இதில் அரசு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முயற்சியாக இருக்கும். 18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்க அரசு தயாராக இருந்தால், அதை மூன்று தவணைகளில் வழங்கக்கூடும். எனினும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக அந்த நேரத்தில் அகவிலைப்படி முடக்கப்பட்டதாகவும், ஆகையால், அந்த காலக்கட்டத்திற்கான தொகையின் நிலுவை கிடைக்காது எனவும் அரசாங்கம் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஊழியர்களின் உரிமை என்று நீதிமன்றம் சார்பில் கூறப்பட்டது. ஜேசிஎம் (பணியாளர்கள் தரப்பு) தேசிய கவுன்சில் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில், ஊழியர்களின் ஊதியம் வெவ்வேறு ஊதிய நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும் என்றது. எடுத்துக்காட்டாக, லெவல்-3ல் உள்ள ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அரசின் முடிவைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மாறலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் தொகை கிடைக்கவுள்ளதா? சமீபத்திய அப்டேட் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News