ஏழாவது ஊதியக்குழு டிஏ அரியர் புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பாக்கி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஊழியர் சங்கம் கொடுத்த அழுத்தத்தின் பேரில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, அமைச்சரவை செயலர் கால அவகாசம் அளித்துள்ளார். இது மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சந்திப்பு எப்போது நடக்கும்


நவம்பர் மாத இறுதியில் மத்திய அரசு 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. டிஏ நிலுவைத் தொகை தொடர்பாக கலந்து ஆலோசிக்க அமைச்சரவை செயலாளருடனான சந்திப்புக்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலுவைத் தொகையை வழங்க அரசு ஒப்புக்கொண்டதா இல்லையா என்பது குறித்த தெளிவான அறிவிப்பு எதுவும் இன்னும் அரசு சார்பில் வரவில்லை. டிஏ நிலுவைத் தொகைக்கு ஏற்கனவே ஒருமுறை அரசு மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


அகவிலைப்படி எப்போது முடக்கப்பட்டது


கொரோனா தொற்றுநோய் காரணமாக மத்திய அரசு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நிறுத்தியது. கொரோனா தொற்றின் நிலை சற்று சீரடைந்த பின்னர், ஜூலை 2021 முதல் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டு, அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. எனினும், மத்திய அரசு ஊழியர்கள், ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் 3 தவணைகளின் நிலுவைத் தொகையைப் பெறவில்லை. 


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு அதிர்ச்சி! முக்கிய விதிகளில் மாற்றங்கள், அரசு உத்தரவு 


இந்த கால அளவில் டிஆர் 11 சதவீதமாக உள்ளது. இதனிடையே, 18 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்கவில்லை. கொரோனா நோய்த்தொற்று காரணமாக, 18 மாத காலத்துக்கு அகவிலைப்படு மற்றும் அகவிலை நிவாரணம் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. அத்தியாவசியமான பிற பணிகளில் இந்த தொகை செலவழிக்கப்பட்டதால், இதன் நிலுவைத் தொகை வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைபவு என அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. 


ஜூலை 2021 முதல் அரசு அகவிலைப்படியை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது அரசாங்கம் அவ்வப்போது டிஏவை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அகவிலைப்படி அரியர் எவ்வளவு கிடைக்கும்


அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இதில், லெவல்-1 ஊழியர்களின் டிஏ நிலுவை ரூ.11,880 முதல் ரூ.37,000 வரை உள்ளது. லெவல்-13 ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையாக ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, அடிப்படை ஊதியம் ரூ.9,000 அதிகரிக்கும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ