7th Pay Commission Latest News: சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு மிகப் பெரிய நல்ல செய்தியை அளித்தது. 11% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவிகிதமாக அதிகரித்தது. மத்திய அமைச்சரவையின் முடிவுக்குப் பின்னர், இது தொடர்பாக அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை DA, DR ஐ மத்திய அரசு திருத்துகிறது. முதல் திருத்தம் ஜனவரி 1 ம் தேதியும், இரண்டாவது திருத்தம் ஜூலை 1 ம் தேதியும் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

28% DA மற்றும் DR வழங்கப்படும், இது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தரவு
கடந்த வாரம், அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி 11 சதவிகிதம் 28 சதவிகிதமாக உயர்த்தியது, ஜூலை 1 முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் 4 லட்சம் மத்திய ஊழியர்களுக்கும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். ஒரு அலுவலக குறிப்பில், நிதி அமைச்சின் கீழ் செயல்படும் நிதித்துறை, மத்திய ஊழியர்களால் பெறப்படும் அகவிலைப்படி 17% முதல் 28% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த உயர்வு 1 ஜனவரி 2020, 1 ஜூலை 2020 மற்றும் 1 ஜனவரி 2021 தவணைகளை உள்ளடக்கியது. அலுவலக மெமோராண்டம் படி, இந்த உத்தரவுகள் பாதுகாப்பு சேவைகளின் மதிப்பீடுகளிலிருந்து செலுத்தப்படும் பொது ஊழியர்களுக்கும் பொருந்தும், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு அந்தந்த அமைச்சகங்களால் தனி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.


ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், இதுதான் காரணம்


DA நிலுவைத் தொகை கிடைக்காது
கொரோனா தொற்றுநோயால் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை டிஏ (Dearness Allowance) மற்றும் டிஆர் ஐ நிதி அமைச்சகம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுத்தியது. இதன் காரணமாக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை 18 மாதங்களுக்கு டி.ஏ மற்றும் டி.ஆர் பெறவில்லை. இந்த 18 மாதங்களின் (2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை) நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக, அதிகரித்த அகவிலைப்படி ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும்.


அகவில்லைப்படி அதிகரிப்பு 
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை ஜூலை 1, 2021 முதல் உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. அகவிலைப்படி தற்போது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஏ 50 சதவீதத்தை கடக்கும்போது, HRA விகிதங்களும் முறையே 30%, 20% மற்றும் 10% ஆக திருத்தப்படும்.


அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சுமார் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் மற்றும் எச்.ஆர்.ஏ ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால், ஊழியர்களின் ஊதியத்தில் பெரிய அளவிலான உயர்வு இருக்கும்.


ALSO READ: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு; எவ்வளவு சம்பளம் கிடைக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR