7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, 28% டி.ஏ-வுக்கு ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17%-லிருந்து 28% ஆக அதிகரிக்கப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 14, 2021, 04:04 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது.
  • இதற்கான ஒப்புதல் இன்று அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
  • இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17%-லிருந்து 28% ஆக உயரும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, 28% டி.ஏ-வுக்கு ஒப்புதல்  title=

7th Pay Commission Latest Updates: 1.2 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண அதிகரிப்பு குறித்த செய்திக்காக நீண்ட காலமாக காத்திருந்தனர். அந்த காத்திருப்பு இப்போது முடிந்துவிட்டது. 

இன்று, பிரதமர் மோடி (PM Modi) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அகவிலைப்படி முடக்கத்தை நீக்குவதற்கான பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மோடி அரசாங்கத்தின் இந்த முடிவால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அகவிலைப்படியை 17% -லிருந்து 28% ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது: 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ள அகவிலைப்படி முடக்கத்தை (Dearness Allowance) நீக்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆதாரங்களின்படி, மத்திய ஊழியர்களுக்கு 28% என்ற விகிதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும். இது இப்போது வரை 17% என்ற விகிதத்தில் பெறப்பட்டு வந்தது. அதாவது, மத்திய அரசின் ஊழியர்களுக்கு இப்போது 11% கூடுதல் அகவிலைப்படி  கிடைக்கும்.

ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் அளித்தது அரசு

கொரோனா தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை கடந்த ஆண்டு மத்திய அரசு தடை செய்திருந்தது. மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 2020, ஜூலை 2020, ஜனவரி 2021 மற்றும் ஜூலை 2021 ஆகியவற்றுக்கான அகவிலைபப்டி நிலுவையை இப்போது பெறுவார்கள்.

இதற்கு முன்னர் மத்திய அரசு (Central Government) 2020 ஜனவரியில் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்தது. இந்த ஆண்டு ஜூன் 2020 இல், டிஏ மேலும் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதன் பின்னர், ஜனவரி 2021 இல் 4% டிஏ அதிகரிக்கப்பட்டது. மொத்தமாக அதிகரிப்பு 11% ஆக இருந்தது. இது இப்போது மத்திய அரசின் ஊழியர்களுக்குக் கிடைக்கும். இந்த மூன்று நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்கு மூன்று தவணைகளில் வழங்கப்படும்.

ஜூலை மாதத்தில் எவ்வளவு டி.ஏ அதிகரிக்கும்

இருப்பினும், ஜூலை டி.ஏ. தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜூலை மாதத்தில் டிஏ 3 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இது நடந்தால், மொத்த அகவிலைப்படி 31% ஆக இருக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் அதிகரித்த அகவிலைப்படி கிடைக்கும்.

ALSO READ: 7th Pay Commission: டி.ஏ அதிகரிப்புக்கு முன்னர் அரசு அளித்த 5 அதிரடி நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News