7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இன்னும் சில நாட்களில் அவர்கள் மீண்டும் சில நல்ல செய்திகளை பெறக்கூடும். இது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் டிஏ நிலுவைத் தொகையை அரசு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்த விரிவான விவரங்களை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிஏ அரியர் தொகை


கொரோனா பெருந்தோற்று நம் உலகை ஆட்கொண்ட போது, அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது உலகமே ஸ்தம்பித்து போனதால், நிதி நெருக்கடியும் இருந்தது. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினருக்கு உதவ, அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) முடக்கியது. நிலைமை சற்று சரியானவுடன் டிஏ முடக்கம் நீக்கப்பட்டது. எனினும், மோடி அரசாங்கம் 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை முடக்கப்பட்ட டிஏ நிலுவைத் தொகையை ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யவில்லை. இந்த டிஏ அரியர் (Da Arrears) தொகையை அளிக்க வேண்டும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேர்தலுக்கு முன் அரசு ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிக்கலாம் என கூறப்படுகின்றது. டிஏ நிலுவைத் தொகை தொடர்பாக ஊழியர் அமைப்புகள் அரசுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. இதன் மூலம் சுமார் 1 கோடி ஊழியர்கள் பயனடைவார்கள். 


மக்களவை தேர்தல்


அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது. அரசாங்கம் அதற்கு முன் 18 மாத கால அகவிலைபப்டி அரியர் தொகையை (DA Arrrears) கணக்கில் டெபாசிட் செய்தால், அது ஊழியர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத டிஏ பாக்கியை வழங்கினால், உயர் பிரிவு ஊழியர்களின் கணக்கில் சுமார் 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வரும். இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். விலைவாசி அதிகரிப்பு மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பெரிய அளவில் உதவியாக இருக்கும். 


மேலும் படிக்க | ஹெல்த் இன்சூரன்ஸ்: ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் காப்பீடு தொடர்பான முக்கிய தகவல்கள்


ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும்


மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) மற்றொரு நல்ல செய்தியும் காத்திருக்கிறது. அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்கும் ஃபிட்மெட் ஃபாக்டரை (Fitment Factor) அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு இப்போது அரசு செவி சாய்க்கலாம் என கூறப்படுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.60 மடங்குகளில் இருந்து 3.0 மடங்காக அதிகரிக்கலாம் என சில சில அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. ஆனால் இந்த அதிகரிப்பு விரைவில் நடக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


பொதுத் தேர்தல்கள்


அடுத்த ஆண்டு நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) ஆதரவை பெற அரசு, டிஏ அரியர், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் போன்ற அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தாண்டுக்கு முன்னதாக, இதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | தங்கம் வாங்க முடியலயா.... கவலையை விடுங்க... போஸ்ட் ஆபீஸ் கை கொடுக்கும்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ