7வது ஊதியக்கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்தது. இப்போது ஊழியர்களின் சம்பளம் 40 ஆயிரம் ரூபாய் வரை உயரப் போகிறது. ஏஐசிபிஐ-யின் தரவுகள் மூலம் ஊழியர்களின் டிஏ எவ்வளவு உயரும் என்பது தெளிவாகியுள்ளது. ஏஐசிபிஐ-யின் இதுவரையான தரவுகளின்படி, 6% அகவிலைப்படி அதிகரிப்பில் ஒரு தெளிவு கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏஐசிபிஐ குறியீட்டு எண்களில் மிகப்பெரிய முன்னேற்றம்


பிப்ரவரி முதல், ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக ஜூலை மாதத்தில் டிஏ அதிகரிப்பு குறைந்தது 6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, மே மாத ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இம்முறை 1.3 புள்ளிகள் அதிகரித்து 129 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும், 6% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது, ஒட்டுமொத்தமாக ஜூன் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு குறையவில்லை என்றால், அகவிலைப்படி 6% அதிகரிப்பது உறுதி என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்


சம்பளம் எவ்வளவு உயரும்?


அரசு அகவிலைப்படியை 6% உயர்த்தினால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 34% லிருந்து 40% ஆக உயரும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்று பார்ப்போம்.


அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி  (40%) - ரூ.22,760/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 22,760-19,346 = ரூ 3,414/மாதம் 
5. ஆண்டு ஊதிய உயர்வு - 3,414 X12 = ரூ 40,968


குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு


1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (40%) - ரூ.7,200/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 7200-6120 = ரூ.1080/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1080 X12 = ரூ 12,960


ஜூலை 31 ஆம் தேதிக்குள் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. அதாவது, இம்முறை ஆகஸ்ட் மாத சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ-வில் பம்பர் ஏற்றம், ரூ. 40,000 வரை சம்பளம் அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR