7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்

7th Pay Commission: ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 5 அல்லது 6% வரை அதிகரிக்கக்கூடும். இதைத் தொடர்ந்து பிஎஃப் மற்றும் பணிக்கொடை அதாவது கிராஜுவிட்டி அதிகரிப்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 28, 2022, 10:55 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
  • மீண்டும் ஒருமுறை ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு ஏற்பட உள்ளது.
  • ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 5 அல்லது 6% வரை அதிகரிக்கக்கூடும்.
7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம் title=

7வது சம்பள கமிஷன் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. மீண்டும் ஒருமுறை ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு ஏற்பட உள்ளது. ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 5 அல்லது 6% வரை அதிகரிக்கக்கூடும். இதைத் தொடர்ந்து பிஎஃப் மற்றும் பணிக்கொடை அதாவது கிராஜுவிட்டி அதிகரிப்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதமாக உள்ளது. அகவிலைப்படியில் அதிகரிப்பு ஏற்பட்டால், பயணப்படி, சிட்டி அலவன்ஸ் ஆகியவையும் தானாக அதிகரிக்கும். இதனுடன், வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராஜுவிட்டியிலும் பம்பர் அதிகரிப்பு இருக்கப் போகிறது. அதாவது, மொத்த சம்பளத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும்.

1- பிஎஃப் தொகை அதிகரிக்கும்

எங்கள் கூட்டாளர் இணையதளமான ஜீ பிசினஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப் மற்றும் பணிக்கொடை அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி- இலிருந்து கணக்கிடப்படுகிறது. அகவிலைப்படி அதிகரித்தால், பிஎஃப், கிராஜுவிட்டி ஆகியவையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் பம்பர் ஏற்றம் 

2- பணிக்கொடை அதிகரிக்கும்

கடந்த ஓராண்டில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூன் 2021 முதல், அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 34 சதவீதத்தை எட்டியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இபிஎஃப் மற்றும் கிராஜுவிட்டி தொகையும் அதிகரித்துள்ளது.

3- பயணப்படி (டிஏ) அதிகரிப்பு

நிபுணர்களின் கூற்றுப்படி, டிஏ அதிகரிப்பின் விளைவு பயணப்படியிலும் இருக்கும். அகவிலைப்படி 34%-ஐ எட்டியுள்ளதால், பயணப்படியும் அதிகரிக்கப்படும். 

அகவிலைப்படி உயர்வு: ஜூலையில் மீண்டும் திருத்தம் இருக்கும்

ஏஐசிபிஐ- இன் தரவுகளின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கப் போகிறது. மே மாத புள்ளிவிவரங்களிலும் அதிகரிப்பு இருந்தால், நிச்சயமாக அகவிலைப்படி 6% வரை அதிகரிக்கும்.

ஒன்றரை ஆண்டு நிலுவைத் தொகை குறித்து முடிவு எடுக்கப்படலாம்

இது தவிர, 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ பாக்கிகள் குறித்தும் முடிவு எடுக்கப்படக்கூடும். 18 மாதங்களாக நிலுவையில் உள்ள மத்திய ஊழியர்களின் நிலுவைத் தொகை குறித்து அரசுடன் ஒருமித்த கருத்து இல்லை. ஆனால் ஜூலையில் இதை பற்றி, அரசு அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: 6% அகவிலைப்படி உயர்வு ஜூலையில் சாத்தியம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News