8வது ஊதியக்குழு, சமீபத்திய தகவல்: அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பிற்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். அகவிலப்படி மட்டுமல்லாமல் மற்றொரு எதிர்பார்ப்பும் ஊழியர்களுக்கு உள்ளது. 8வது ஊதியக்குழு பற்றிய செய்திதான் அது. புதிய ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், தற்போது அது வலுத்துள்ளது. 8வது ஊதியக்குழுவை விரைவில் அமைக்க வேண்டும் என ஊழியர் அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயல்கின்றன. ஆனால், இதுவரை இதை அரசு தெளிவாக மறுத்து வருகிறது. எனினும், அரசு இதை பரிசீலிக்கக்கூடும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் அதற்கான சாத்தியம் உள்ளதா? அடுத்த ஆண்டு அரசு புதிய ஊதியக் குழுவை அமைக்குமா? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

8th Pay Commission: அடுத்த ஆண்டு ஊழியர்களுக்கு பரிசு கிடைக்கலாம்


மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், ஊதியக் கமிஷன் வரும்போதுதான் மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால், அடுத்த ஊதியக் குழுவை அமைப்பது குறித்து அரசுக்கு இதுவரை எந்த யோசனையும் இல்லை என்று நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது தெளிவுபடுத்தினார். அத்தகைய முன்மொழிவு எதையும் அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று அவர் கூறினார். ஊழியர்களின் சம்பளத்தை சீரமைக்க தனி திட்டமிடல் தேவை, அரசு அதில் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு ஊழியர்களுக்கு அரசு இந்த பரிசை வழங்கலாம் என்ற யூகங்கள் உள்ளன. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.


புதிய ஊதியக்குழு முதல் காரணம்: அகவிலைப்படி 50 சதவீதம்


ஏழாவது ஊதியக் குழுவின் உருவாக்கத்துடன், அகவிலைப்படியை திருத்துவதற்கான விதிகளை அரசாங்கம் மாற்றியது. இதன் படி அகவிலைப்படி (DA Hike) 50 சதவீதத்தை எட்டும்போது, ​​அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இதற்குப் பிறகு, அப்போதுள்ள அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத டிஏ சேர்க்கப்பட்டு, அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும். தற்போதைய அறிகுறிகளைப் பார்க்கும்போது, ​​அக்டோபர் மாதத்தில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும் என்று தெரிகிறது. இதற்குப் பிறகு, அடுத்த திருத்தம் அடுத்த ஆண்டு ஜனவரி 2024 இல் இருக்கும். ஆனால், அதன் அறிவிப்புக்கு மார்ச் 2024 வரை காத்திருக்க வேண்டும். CPI-IW குறியீட்டின் போக்கைப் பார்க்கும்போது, ​​ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என்றும் அதன் பிறகு மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும் என்றும் தோன்றுகிறது. அதாவது அதன் பிறகு டிஏ பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், அரசாங்கம் புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். ஏனெனில், சம்பளக் கமிஷன் உருவான பிறகுதான் சம்பள அமைப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


புதிய ஊதியக்குழு இரண்டாவது காரணம்: பொதுத்தேர்தல் 


கடந்த 2013-ம் ஆண்டு ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது, அதன்பிறகு பரிந்துரைகளை அமல்படுத்த 3 ஆண்டுகள் ஆனது. அத்தகைய சூழ்நிலையில், அதன் உருவாக்கத்தை அரசாங்கம் இப்போதே பரிசீலிக்க வேண்டும் என ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ளன. ஆகையால், மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்க, தேர்தல்களுக்கு முன் அரசு 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்து அறிவிக்கலாம். ஏனெனில், சம்பளத் திருத்தம் செய்ய வேண்டுமானால், அதற்கு புதிய ஊதியக்குழு அமைப்பது அவசியமாகும். இருப்பினும், ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் ஃபார்முலாவின் அடிப்படையில் அரசாங்கம் சம்பளத்தை அதிகரிக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. மாறாக, அரசு சம்பள உயர்வுக்கு வேறு சில சூத்திரங்களை நடைமுறைப்படுத்தலாம். மேலும், 10 ஆண்டுகளுக்கு பதிலாக, ஒவ்வொரு ஆண்டும் சம்பள கமிஷன் போன்ற ஏதாவது ஒரு செயல்முறைக்கான விதியையும் அரசு உருவாக்கலாம்.


அரசின் நோக்கம் என்ன?


சம்பள திருத்தத்திற்காக (Salary Hike) ஊழியர்கள் 10 ஆண்டுகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என அரசு விரும்புகிறது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். 7வது ஊதியக் குழுவிலேயே இது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு ஒரு புதிய வழியில் திட்டமிட்டு வருகிறது. ஆனால், என்ன திட்டமிடப்பட்டது என்பது குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை. தற்போது அரசும் இதைப்பற்றி எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி.... தீபாவளிக்கு முன் அதிரடி டிஏ உயர்வு


புதிய சம்பள கமிஷன் நடைமுறைப்படுத்தப்படுமா?


8வது ஊதியக் குழுவின் உருவாக்கம் 2024 ஆம் ஆண்டில் நடைபெறலாம் என எமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது சம்பள திருத்தத்திற்கான அடிப்படையாக கருதப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. செயல்முறையை முடிக்க இது ஒரு வழியாக இருக்கும். 7வது ஊதியக் குழுவுடன் ஒப்பிடும்போது 8வது ஊதியக் குழுவில் பல மாற்றங்கள் இருக்கலாம். இதில், பழைய ஃபார்முலாவால் சம்பளம் உயராது. மாறாக, சில புதிய செயல்திறன் சாதனைப் பதிவு (Performance Track Record) உருவாக்கப்படும். அனைத்து பணியாளர்களின் சம்பளமும் அதன் அடிப்படையிலெயே திருத்தப்படும். சம்பள கமிஷன் பெயரும் புதியதாக இருக்கலாம். 10 ஆண்டுகளுக்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் அதைச் செயல்படுத்த பரிந்துரை இருக்கலாம். இதற்காக ஒரு குழு அமைக்கப்படலாம். இப்படி பல ஊகங்கள் உள்ளன. 


யாருக்கு அதிக பலன் கிடைக்கும்?


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க தற்போதுள்ள 10 ஆண்டு கால இடைவெளி மிகப்பெரியதாக உள்ளது. இதை 1 அல்லது 3 வருடங்களாக அரசு மாற்றக்கூடும். இதில், கீழ்நிலை ஊழியர்களின் சம்பள திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் செயல்திறன் அடிப்படையில் மேற்கொள்ளப்படலாம். அதே நேரத்தில், அதிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 3 வருட இடைவெளியில் திருத்தம் செய்யப்படலாம். இது கீழ்மட்ட ஊழியர்களின் சம்பளத்தில் நல்ல திருத்தம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இப்போது இரண்டு நிலை ஊழியர்களின் ஊதிய வரம்புகளில் பெரிய வித்தியாசம் உள்ளது.


மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்.. அகவிலைப்படியில் பெரும் பரிசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ