Bank Holidays 2021: வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான பணிகளை நீங்கள் செய்ய விரும்பினால், அதை சரியான நேரத்தில் முடிக்கவும். ஏனெனில், நாடு முழுவதும் மார்ச் 27 முதல் 29 வரை வங்கிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படும். இடையில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே வங்கி தனது சேவைகளைத் தொடரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஹோலி பண்டிகை (Holi) காரணமாக நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகள் மார்ச் 27 முதல் 29 வரை மூன்று நாட்களுக்கு மூடப்படும். மார்ச் 31 விடுமுறை (Bank Holidaysஅல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், ஆனால் நிதியாண்டு முடிவடைவதால் மார்ச் 31 அன்று வங்கி சேவைகள் நிறுத்தப்படும். 


ALSO READ | Bank Holidays In April 2021: ஏப்ரல் மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்!


வங்கிகள் (Banks) எப்போது மூடப்படும் என்பதன் முழு தகவலை இங்கே பெறுங்கள். வங்கி மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் மட்டுமே செயல்படும். மார்ச் 31 நிதியாண்டின் கடைசி நாளாக இருக்கும், வங்கி அதன் உள் வேலைகளைச் சமாளிக்கும், ஆனால் வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் வேலை செய்ய முடியாது.


வங்கிகள் மூடப்படும் / திறக்கப்படும் தேதிகளின் முழு பட்டியல்
மார்ச் 27 - கடைசி சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்படும்.
மார்ச் 28 - ஞாயிற்றுக்கிழமை, வங்கிகள் மூடப்படும்
மார்ச் 29 - ஹோலி விடுமுறை, வங்கிகளும் மூடப்படும்
மார்ச் 30 - பாட்னாவில் வங்கிகள் மூடப்படும்.
மார்ச் 31 - நிதியாண்டின் கடைசி நாள்.
ஏப்ரல் 1 - வங்கியின் வருடாந்திர கணக்கின் இறுதி ஆண்டு.
ஏப்ரல் 2 - புனித வெள்ளி, எனவே வங்கிகள் மூடப்படும்
ஏப்ரல் 3 - சனிக்கிழமை, ஆனால் இது முதல் சனிக்கிழமை, எனவே வங்கிகள் திறந்திருக்கும்.
ஏப்ரல் 4 - ஞாயிறு மற்றும் ஈஸ்டர் எனவே வங்கிகள் மூடப்படும்.


ரிசர்வ் வங்கியின் காலண்டரின் படி, நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளைத் தவிர, நாடு முழுவதும் gazetted holidays நாட்களில் வங்கிகள் மூடப்படும்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR