EPS Pension: PF கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் பணியாளர் வருங்கல வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தைப் (EPS) பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952 (1952 19) பிரிவு 6A இன் கீழ், 1995 ஆம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Employee Pension Scheme: 


= ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 16 நவம்பர் 1995 முதல் செயல்படுத்தப்பட்டது. 
- ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952 -இன் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களுக்குப் பொருந்தும். 
- EPFO இன் EPS ஓய்வூதிய நிதியின் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியம் 1000 ரூபாய் என்ற வசதி 2014 செப்டம்பர் 1 முதல் தொடங்கப்பட்டது. 


EPS: இந்தத் திட்டத்தை யார் பயன்படுத்திக்கொள்ள முடியும்?


ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்பும் பணியாளர்கள் கண்டிப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இன் உறுப்பினராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) மாதா மாதம் தங்கள் ஊதியத்திலிருந்து 12% தொகையை இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். நிறுவனமும் அதே அளவு தொகையை டெபாசிட் செய்கிறது. எனினும், நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் 8.33% ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் மீதமுள்ள தொகை இபிஎஃப் கணக்கிற்கும் செல்கிறது. 


மேலும் படிக்க | ரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அட்டகாசமான தீபாவளி போனஸ்... மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மேலும், இபிஎஸ் ஓய்வூதிய நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற, ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியை முடிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் வயது 58 ஆகும். எனினும், இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) 50 வயதிற்குப் பிறகு குறைந்த கட்டணத்தில் தங்கள் கணக்கிலிருந்து தொகையை எடுக்கலாம். 


ஊழியர் இறந்தால், அந்த உறுப்பினரின் குடும்பத்தில் உள்ள ஒருவர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவார். இறக்கும் போது பணியாளர் பிஎஃப் உறுப்பினராக இருந்தால். அதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை பலன் கிடைக்கும். இபிஎஸ் ஓய்வூதிய நிதித் திட்டத்தின்படி, உறுப்பினருக்கு குடும்பம் இல்லாமல் அவர் இறந்தால், அவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நாமினி வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுவார்.


ஒரு EPF உறுப்பினர் 58 வயதுக்கு முன் 10 ஆண்டுகள் வேலை செய்ய முடியாவிட்டால், அவர் 58 வயதில் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். எனினும். ஓய்வு பெற்ற பிறகு, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அவருக்கு மாதாந்திர ஓய்வூதிய பலன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 


குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்


இதற்கிடையில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை (Minimum Monthly Pension) அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் சூடுபிடித்துள்ளன. ஊழியர் ஓய்வூதியத் திட்டம் தேசிய போராட்டக் குழு, குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போது இருக்கும் ரூ.1,000 -இலிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என அரசாங்கத்திடம் தீவிரமாக கோரிக்கை விடுத்துள்ளது. 


மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு அட்டகாசமான செய்தி: நிதி அமைச்சகத்திடமிருந்து பறந்த உத்தரவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ