பயணிகளுக்கு இந்தியன் ரயில்வே தந்த புதிய வசதி: ரயிலில் பயணிப்பவர்களுக்கு ரயில்வே துறையால் அவ்வப்போது பல புதிய மற்றும் அற்புதமான அப்டேட்கள் வழங்கி வருகிறன. அந்த வகையில் தற்போது ரயிலில் ஜெனரல் கோச்சில் பயணிக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ரயில்வே துறை (Indian Railways) வழங்கியுள்ளது. அதன்படி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஜெனரல் டிக்கெட்டில் (General Ticket) பயணிக்கும் பயணிகளுக்கு உணவு வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ரயில்வே வரலாற்றில் இதுவரை எந்த ரயில்வே அமைச்சரும் இப்படி ஒரு முடிவை எடுத்ததில்லை. இது குறித்து கூடுதல் விவரத்தை இங்கே அறிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலிவாக உணவும் தண்ணீரும் கிடைக்கும்
இந்நிலையில் பயணிகளின் பயணத்தை சிறப்பாகச் செய்ய ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது. அந்தவகையில் ஜெனரல் கோச்சுகளில் பயணிப்பவர்களுக்கு குறைந்த விலையில் உணவு மற்றும் தண்ணீர் வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.


மேலும் படிக்க | Post Office Scheme: தபால் அலுவலகத்தில் இத்தனை முதலீடு திட்டங்கள் இருக்கிறதா?


இந்த தகவலை ரயில்வே வாரியம் வழங்கியது
ஜெனரல் கோச்சுகள் வரும் இடத்தில் பிளாட்பாரத்தில் உணவு வழங்கும் கவுன்டர்கள் அமைக்கப்படும், இதனால் ஜெனரல் கோச்சுகளில் பயணிக்கும் பயணிகள் தங்களின் உணவை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும் என்கிற எண்ணத்தில் ரயில்வே வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.


2 வகைகளால் உணவுகள் பிரிக்கப்பட்டும்
இந்நிலையில் ரயில்வே தரப்பில் இருந்து வழங்கப்பட்ட தகவலின்படி, உணவு இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் வகுப்பில் உணவு விலை ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளுக்கு உருளைக்கிழங்கு கரி, ஊறுகாயுடன் சேர்த்து 7 பூரிகள் வழங்கப்படும். இது தவிர, இரண்டாம் வகுப்பு உணவில் பயணிகளுக்கு சாதம், ராஜ்மா, சோலே, கிச்சடி குல்சே, பட்டூரே, பாவ்-பாஜி மற்றும் மசாலா தோசை போன்ற பல வகையான உணவுகள் வழங்கப்படும்.


பாட்டில் தண்ணீரும் கிடைக்கும்
பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு இந்த வசதியை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்கள் மூலம் மலிவு விலையில் உணவு மற்றும் பாட்டில் தண்ணீரை வழங்க ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. இதனுடன், நிலையங்களில் குடிநீர் சாவடிகள் அமைக்கவும், வழியில் உள்ள நீர்நிலைகளில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் கழிப்பறைகளில் தண்ணீர் வருவதற்கான முழுமையான ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தவிர, பொதுப்பெட்டியில் பயணிப்போருக்கு, பேண்ட்ரி கார் உள்ள ரயில்களின் வசதி இல்லை. ஓடும் ரயிலில் பொதுப் பெட்டிக்குள் நுழைய வழியில்லாததால், பேன்ட்ரிகார் விற்பனையாளர்கள் பயணிகளை அணுக முடியாமல் தவிக்கின்றனர். இப்பிரச்னையை கருத்தில் கொண்டு, தற்போது ஜெனரல் கோச்சில் அனைத்து வசதிகளையும் செய்து தர ரயில்வே உத்தரவிட்டுள்ளது.


51 நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படும்
தற்போது இந்த வசதி 6 மாத காலத்திற்கு வழங்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இது தற்போது சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் 51 நிலையங்களில் இந்த முறை அமல்படுத்தப்படும். தற்போது ஜூலை 20 ஆம் தேதி முதல் 13 நிலையங்களில் இந்த சோதனையை ரயில்வே தொடங்கியுள்ளது. இந்த கவுன்டர்களில் 200 மில்லி கிளாஸ் குடிநீர் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு அடிச்சது லாட்டரி.. அரியர் தொகையும் வரி விலக்கும் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ