ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி வருகைக்குப் பிறகு டெக் உலகம் முழுவதும் ஆடிப்போயிருக்கிறது. கூகுள் நிறுவனம் கூட சாட்ஜிபிடி இவ்வளவு பெரிய வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கவில்லை. சாட்ஜிபிடி வெளியான ஒரு வாரத்திலேயே சுமார் 10 கோடிக்கும் மேலான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கும் வரவேற்பை பெற்றதால், ஆடிப்போன கூகுள் நிறுவனம் உடனடியாக தன்னுடைய ஏஐ தொழில்நுட்பம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் பார்டு என்ற பெயரில் கூகுள் நிறுவனம் புதிய சாட்போட்டை உருவாக்கியுள்ளது. அதனை சாட்ஜிபிடியை விட மேம்படுத்தப்பட்ட தகவல்களை கொடுக்கும் வகையில் அதன் அம்சங்கள் மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சாட்ஜிபிடி-க்கு போட்டியாக எலான் மஸ்க் உருவாக்கும் புதிய ஏஐ - நாளுக்கு நாள் எகிறும் போட்டி


கூகுளின் இந்த அவசரத்துக்குப் பின்னணியில் ஓபன் ஏஐ சாட்ஜிபிடி, கூகுளின் அடிமடியிலேயே கைவைத்தது தான். கூகுள் நிறுவனம் தேடுபொறி வழியாகவும், அதன் மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள் வழியாகவே அதிக வருவாயை ஈட்டி வருகிறது. அதற்கு போட்டியாக உருவாக்கபட்டிருக்கும் சாட்ஜிபிடி, கூகுளை விட ஸ்மார்டாக மக்கள் தேடும் விஷயங்களுக்கு பதிலை கொண்டு வந்து தருகிறது. இதனால், கூகுளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உடனடியாக சாட்ஜிபிடி பக்கம் திரும்பிவிட்டனர்.



இது வருவாயில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும் என யூகித்துவிட்ட கூகுள், அதிரடியாக கூகுள் பார்டு சாட்ஜிபிடியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களுடைய தேடுபொறிக்காக (Search Engine) ஏற்கனவே சாட்ஜிபிடியுடன் கூட்டணி அமைத்துவிட்டது. இதுவும் கூகுளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை சமாளிக்க கூகுள் கணக்கு போட்டுக் கொண்டிருக்கும்போது, அமேசான் நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தில் கவனத்தை குவித்துள்ளது. இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் நிலையில், உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஏஐ தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.



அவருக்கு ஏஐ தொழில்நுட்பம் ஒன்றும் புதிதல்ல. இப்போது உலகை வியப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கும் சாட்ஜிபிடி உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தவர் தான் எலான் மஸ்க். இவரும் சாம் ஆல்ட் மேனும் இணைந்து தான் இந்த நிறுவனத்தையே தொடங்கினர். ஆனால், 2018 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் இருந்து எலான் மஸ்க் வெளியேறிவிட்டார். இப்போது ஏஐ தொழில்நுட்பங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு வியந்திருக்கும் அவர், தானும் களத்தில் குதிக்க ரெடியாகவிட்டார். இனி ஏஐ (ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்) அதாவது செயற்கை நுண்ணறிவு தான் சர்வ மயம் எனவும் அறிவித்திருக்கிறார். அவரின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் ஏஐ தொழில்நுட்ப துறையில் கற்பனைக்கு எட்டாத கண்டுபிடிப்புகள் வர வாய்ப்பு இருப்பதாக டெக் உலகம் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. 


மேலும் படிக்க | ChatGPT-க்கு மூளையாக இருந்தவர் யார் தெரியுமா? எலோன் மஸ்குக்கு என்ன தொடர்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ