மத்திய ஊழியர்களின் அகவிலை உயர்வு 2024: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது அற்புதமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஜூலை முதல் டிசம்பர் வரையான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவை வெளியிட்ட தொழிலாளர் அமைச்சகத்தின் படி, தற்பது அகவிலை மதிப்பெண் 50.28 சதவீதத்தை எட்டியுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி முதல் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மத்திய மோடி அரசின் புதிய அகவிலை விகிதங்களை மார்ச் மாதம் ஹோலி பண்டிகைக்கு முன்னதாக அறிவிக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் மாதம் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஏற்படலாம்:


லோக்சபா தேர்தலுக்கு முன்பு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்: இந்நிலையில் தற்போது, ​​ஊழியர்கள் 46% அகவிலையின் பலனைப் பெற்று வருகின்றனர். ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுக்குப் பிறகு, மதிப்பெண் 138.8 புள்ளிகளையும், டிஏ மதிப்பெண் 50.28 சதவீதத்தையும் எட்டியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அகவிலையில் 4% அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே புதிய அகவிலை ஜனவரி 2024 முதல் நீட்டிக்கப்படும், இதன் மூலம் ஜூன் 2024 வரை பொருந்தும், அத்தகைய சூழ்நிலையில் ஜனவரி முதல் மார்ச் வரை நிலுவைத் தொகையும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நிலுவை தொகை மற்றும் அகவிலை மார்ச் மாதம் வழங்கப்படும் என நம்பப்படுகிறது.


மேலும் படிக்க | Old Pension Scheme: அடி தூள்!! இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம்... உயர்நீதிமன்ற உத்தரவு வந்தது


சம்பளத்தில் ரூ.9000 பலன் கிடைக்கும்:


இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்களின் அகவிலை 50 சதவீதமாக உயரும். அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டி விடும் பட்சத்தில் மத்திய அரசு மீண்டும் புதிய ஊதிய குழுவை அமல்படுத்த தொடங்க வேண்டும். அப்போது DA பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கப்படும். ஆனால் உயர்த்தப்பட்ட 50 சதவீத அகவிலையானது ஊழியர்களின் அடிப்படையை சம்பளத்துடன் சேர்க்கப்படும். அதன்படி, வரும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கையின் போது மத்திய அரசு ஊழியர்கள் 9000 ரூபாயை கூடுதலாக பெறுவார்கள். தற்போது பெற்று வரும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18,000 உடன் ரூ.9000 சேர்க்கப்பட்டு அதன் பிறகு அடிப்படை சம்பளம் ரூபாய் 27000 என்று கணக்கிடப்படும்.


அதுமட்டுமின்றி அகவிலை அதிகரிப்புடன், எச்ஆர்ஏவும் 3% அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் எச்ஆர்ஏ 27% இல் இருந்து 30% ஆக அதிகரிக்கும். ஆனால், அகவிலைப்படி 50% -ஐ எட்டும்போது மட்டுமே இது நடக்கும். அகவிலைபப்டி 50 சதவீதத்தை எட்டியவுடன், எச்ஆர்ஏ நகர வகைகளுக்கு ஏற்ப 30%, 20% மற்றும் 10% ஆக மாறும். தற்போதுள்ள நிலவரப்படி எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்களுக்கு 27 சதவீத ஹெச்ஆர்ஏ கிடைக்கிறது. டிஏ 50% ஆக உயர்ந்தால், இது 30% ஆகிவிடும். அதே நேரத்தில், ஒய் பிரிவு ஊழியர்களுக்கு இது 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு மக்களுக்கு இது 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.


மேலும் படிக்க | 7th pay commission: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ ஹைக், டிஏ அரியர்.. இரண்டும் வருமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ