EPFO Update: இபிஎஃப் தொகை பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி பாதுகாப்பாக இருக்கின்றது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இந்த நிதியை நிர்வகிக்கின்றது. இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறார்கள். நிறுவனங்களும் அதே அளவு தொகையை பணியாளர்களின் கணக்கில் செலுத்துகிறார்கள். இபிஎஃப் உறுப்பினர்களுக்காக (EPF Members) அரசாங்கத்தால் புதிய விதிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றால் பணியாளர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PF தொகையை நிர்வகிக்கும் அமைப்பான EPFO, இப்போது அத்தகைய மற்றொரு புதிய விதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு பம்பர் நன்மைகள் கிடைத்து வருகின்றன. EPFO இப்போது ஆட்டோ மோட் செட்டில்மென்ட்டைத் (Auto Mode Settlement) தொடங்கியுள்ளது. இதன் பலன்களை  6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் எளிதாகப் பெற முடியும்.


EPFO ஆல் தொடங்கப்பட்ட ஒரு வசதி, அவசரகாலத்தில் PF உறுப்பினர்களுக்கு நிதி வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. பிஎஃப் பணியாளர்களுக்கு தேவைப்படும் தொகை மூன்று நாட்களுக்குள் எளிதாக அவர்களது கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. EPFO அதன் சந்தாதாரர்களுக்கு சில வகையான அவசரத் தேவைகளுக்காக தங்கள் பிஎஃப் நிதியிலிருந்து பணத்தை எடுக்கும் வசதியை வழங்குகிறது. நோய் சிகிச்சை, படிப்பு, கல்வி மற்றும் திருமணம் போன்றவற்றிற்காக ஊழியர்கள் இந்தப் பணத்தை எடுக்கலாம்.


மேலும் படிக்க | பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்பட்டால் சமூகநீதி நிலைநாட்டப்படும்! ஆய்வு சொல்லும் உண்மை


Auto Aode Settlement: அவசரகாலத்தில் எவ்வளவு தொகையை எடுக்க முடியும்? 


EPFO ஆல் தொடங்கப்பட்ட அவசர காலங்களுக்கான க்ளைம் செட்டில்மென்ட் ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. நிதியின் க்ளைம் செட்டில்மென்ட் செய்ய ஆட்டோ மோட் தொடங்கப்பட்டுள்ளது. இது 2020 இல் EPFO ​​ஆல் தொடங்கப்பட்டது. அப்போது நோய் சிகிச்சைகளுக்காக மட்டுமே க்ளைம் செட்டில்மெண்டுக்கான தானியங்கி அதாவது ஆட்டோ மோட் செயல்முறை இருந்தது. இப்போது வீடு வாங்குதல் அல்லது கட்டுதல், திருமணம், கல்வி ஆகிய தேவைகளும் இந்த வசதியின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. 


இந்த வசதியின் கீழ் கொடுக்கப்பட்டும் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் போன்றவற்றிற்காகவும் ஊழியர்கள் EPF கணக்கில் இருந்து இனி பணத்தை எடுக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், முன்பு பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.50,000 ஆக இருந்தது. தற்போது இந்த வரம்பை ரூ.1 லட்சமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு தேவைப்படும் முன்பணத்தை அவர்களுக்கு வழங்கும் பணி ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் கணினி மூலம் எளிதாக செய்யப்படும். இதனால் எந்த வித நேர விரயமும் ஏற்பட வாய்ப்பில்லை. இதற்கு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என்பதை பிஎஃப் உறுப்பினர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 


2020 -இல் தொடங்கப்பட்டது


அவசரகாலங்களில் நிதியை க்ளைம் செட்டில் செய்வதற்கான தானியங்கி செயல்முறை, அதாவது ஆட்டோ மோட் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்டது. எனினும்ம் அப்போது உடல்நல பிரச்சனை, அதாவது நோய்களுக்கான சிகிச்சையின் போது மட்டுமே பணத்தை எடுக்க முடியும். இப்போது அதன் நோக்கம் விரிவடைந்துள்ளது. நோய்களுக்கான சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குவதற்கான நிதி உதவி என இவை அனைத்துக்கும் இப்போது EPFல் இருந்து பணத்தை எடுக்கலாம்.


மேலும் படிக்க | காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் விலை 50% உயர்வால் விற்பனையில் சரிவு! அதிர்ச்சியில் நெசவாளர்கள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ