இந்தியாவின் முதல் 'கிரெடிட் ஷாப்' (Udhaar ki Dukaan) கிரெடிட்கார்ட் ஒரு தனித்துவமான சலுகையுடன் வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் பண்டிகை காலம் ஆரம்பித்துவிட்டது. ந்த ஆண்டு கொரோனா தொற்றால் மக்கள் நிதி ரீதியாக பதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில், மக்களுக்கு நிறுவனங்கள் பல சலுகலைகளை அறிவித்து வருகிறது. குறைந்த பட்ஜெட் காரணமாக ஷாப்பிங் செய்ய முடியாவிட்டால் பதற்றம் வேண்டாம். நாங்கள் உங்களுக்காக ஒரு சலுகையை கொண்டு வந்துள்ளோம், இதன்மூலம் நீங்கள் சுதந்திரமாக ஷாப்பிங் செய்யலாம். இதன் சிறப்பு என்னவென்றால், இந்த சலுகையுடன் ஷாப்பிங் செய்வதன் மூலம், நீங்கள் 100 சதவீதம் வரை கேஷ்பேக் பெறுவீர்கள். அதாவது, இந்த தீபாவளியை தாராளமாக ஷாப்பிங் செய்யுங்கள், அதுவும் முற்றிலும் இலவசம்.


இந்தியாவின் முதல் 'கிரெடிட் ஷாப்' (Udhaar ki Dukaan) கிரெடிட்கார்ட் ஒரு தனித்துவமான சலுகையுடன் வருகிறது. 100% கேஷ்பேக் சலுகை நவம்பர் 15 வரை உள்ளது. மேலும், இந்த சலுகையில் தனி கட்டணம் ஏதும் இல்லை. இந்த பண்டிகை காலங்களில், கிரெடிட் ஷாப் மூலம் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 15 வரை ஷாப்பிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் மற்றும் அவர்கள் வாங்கியதில் 100% கேஷ்பேக் கிடைக்கும்.


இந்தியாவின் முதல் ஆன்லைன் 'கிரெடிட் ஷாப்' என்று அழைக்கப்படும் கிரெடிட்கார்ட்டில் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல தரமான தயாரிப்பு  மலிவான வரம்பில் கிடைக்கும். இது ஃபின்-காம் வசதி மற்றும் அடுக்கு 2, 3 மூலமாக தயாரிப்புகளை வாங்குவதற்கு நிதியளிக்கப்படுகிறது. மேலும், 4 நகரங்களில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் ஷாப்பிங் செய்யலாம். நீங்கள் பின்னர் பில் செலுத்தலாம்.


ALSO READ | உங்கள் SBI ATM அல்லது Debit Card தொலைந்து விட்டதா? இந்த வழியில் block அல்லது reissue செய்யலாம்!!


வாங்குபவர்களுக்கு அவர்களின் பணப்பையில் 100% கேஷ்பேக் கிடைக்கும். கேஷ்பேக்கிற்கு, பயனர்கள் 'PAY NOW' பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் எவ்வளவு ஷாப்பிங் செய்திருந்தாலும், நிச்சயமாக நீங்கள் கேஷ்பேக் பெறுவீர்கள். இந்த அட்டையுடன் ரூ.10,000-க்கு ஷாப்பிங் செய்தால், உங்கள் பணப்பையில் ரூ .10,000 கேஷ்பேக் வரும்.


இந்த சலுகை வாங்குபவர்களுக்கு மட்டுமே, இந்த தளத்திலிருந்து நவம்பர் 15 வரை வாங்குவார்கள். பணத்தை சேமிப்பது பணம் சம்பாதிப்பது என்று புனேவின் முத்ராவிக் ஃபிண்டெக் மற்றும் கிரெடிட்கார்ட்டின் நிறுவனர் ஸ்வப்னில் மடியார் கூறுகிறார். வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல ஷாப்பிங் அனுபவத்தை வழங்கவும், அவர்களின் வசதியைக் கவனிக்கவும், 'PAY NOW' விருப்பம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த அம்சத்தில், பதிவுசெய்த பிறகு பயனர்களுக்கு 'Buy Now, Pay Later' என்ற விருப்பம் வழங்கப்படுகிறது. இந்த விருப்பத்தில் வட்டி, குறைப்பு அல்லது செயலாக்க கட்டணம் இல்லை. உங்கள் கடன் மதிப்பெண்ணைப் பார்த்து பயனர்களுக்கு இந்த கடன் வசதி வழங்கப்படுகிறது. அதில் பொருட்களை வாங்கிய பிறகு, அவர்கள் அதை தொடர்ந்து மூன்று தவணைகளில் செலுத்தலாம்.