இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நவராத்திரி, மற்றும் தீபாவளி ஆகியவற்றின் போது, ​​வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல பிரமாண்டமான தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன. பண்டிகைக் காலங்களில் கார், வீடு வாங்குவது மற்றும் ஷாப்பிங் செய்வது மிகவும் மங்களகரமானதாக மக்கள் கருதுகின்றனர். அதன்படி வங்கிகள் வழங்கும் இந்த பண்டிகை சலுகைகளைப் பயன்படுத்தி நீங்களும் பம்பர் தள்ளுபடிகளைப் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ போன்ற நாட்டின் பல பெரிய வங்கிகள் சிறப்புச் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அந்த வகையில் நீங்கள் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்யப் போகிறீர்கள் அல்லது வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்கள் என்றால், இந்த பம்பர் தள்ளுபடிகளின் பலனைப் பெறலாம். எனவே வெவ்வேறு வங்கிகள் வழங்கும் தள்ளுபடி சலுகைகள் பற்றிய தகவலை இங்கே பெறுங்கள்-


மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் செய்தி: 4% உயர்ந்தது அகவிலைப்படி, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள் 


ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடனுக்கு மிகப்பெரிய சலுகையை வழங்குகிறது, பண்டிகை கால சிறப்பு சலுகைகள் குறித்து ஸ்டேட் வங்கி ட்வீட் செய்து தகவல் அளித்துள்ளது. அதன்படி, எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் அளித்து, இந்த ஆண்டு நவராத்திரியில், கார் கடன், தனிநபர் கடன் மற்றும் தங்கக் கடன் ஆகியவற்றில் வங்கி சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. பண்டிகை கால சலுகையில், கடன்களுக்கான செயலாக்க கட்டணத்தை தள்ளுபடி செய்ய எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. கார் கடன் ஒரு லட்சத்திற்கு 1551 இஎம்ஐ ஆகும், தனிநபர் கடன் இஎம்ஐ ஒரு லட்சத்திற்கு ரூ 1868, ஒரு லட்சத்திற்கு ரூ.3134 தங்கக் கடன் இஎம்ஐ-யில், வங்கி ஒரு ரூபாய் செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கவில்லை.



இது தவிர பிராண்டுகளின் ஷாப்பிங்கில் மிகப்பெரிய சலுகைகள் கிடைக்கின்றன
இது தவிர, ஸ்டேட் வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பிராண்டுகளை ஷாப்பிங் செய்வதில் மிகப்பெரிய தள்ளுபடி உள்ளது. மிந்த்ரா, ஜிவா, கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்றவற்றில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இதில், சில பிராண்டுகளுடன் 22.5% வரை தள்ளுபடியும் பெறலாம். மறுபுறம், எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு 15% வரை தள்ளுபடி பெறலாம்.


மற்ற வங்கிகளும் சிறந்த சலுகைகளை வழங்குகின்றன
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியைப் பற்றி பேசுகையில், இ-காமர்ஸ் இணையதளத்தில் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இதனுடன், நீங்கள் கட்டணமில்லா இஎம்ஐ விருப்பத்தையும் பெறுகிறீர்கள். மறுபுறம், பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன் செயலாக்கக் கட்டணம் மற்றும் ஆவணக் கட்டணங்களில் தள்ளுபடியை வழங்குகின்றன. அதே நேரத்தில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தனது பல்வேறு வகையான கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.


மேலும் படிக்க | வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ