7th Pay Commission பம்பர் செய்தி: 4% உயர்ந்தது அகவிலைப்படி, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் செய்தி கிடைத்துள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 29, 2022, 12:45 PM IST
  • அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
  • அரச ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  • 50 லட்சம் மத்திய ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள்.
7th Pay Commission பம்பர் செய்தி: 4% உயர்ந்தது அகவிலைப்படி, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்  title=

7th Pay Commission, DA Hike: புதன்கிழமை (இன்று) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அரச ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதைய அகவிலைப்படி 34 சதவீதமாக உள்ளது. இது தற்போது 4 சதவீதம் அதிகரித்த பின்னர், 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசின் இந்த முடிவால் தற்போதுள்ள 50 லட்சம் மத்திய ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள்.

டிஏ உயர்வு ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும்

2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அரசாங்கத்தின் அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும். முன்னதாக மார்ச் 2022 இல், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது அது 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்படி, ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளத்தில் இரண்டு மாத டிஏ ஏரியர் கிடைக்கும். 

இந்த அடிப்படையில் டிஏ அதிகரிக்கிறது

ஏஐசிபிஐ-டபிள்யூ (அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு- தொழில்துறை பணியாளர்) குறியீட்டின் தரவை, லட்சக்கணக்கான ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிப்பதற்கான அடிப்படையாக மத்திய அரசு கருதுகிறது. முதல் பாதிக்கான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் குறியீட்டு எண் 129.2 ஆக உயர்ந்ததால், 4 சதவீதமாக டிஏ உயர்த்தப்பட்டது. 

மேலும் படிக்க | EPFO சூப்பர் செய்தி: இனி அவசர காலத்தில் இரு மடங்கு தொகையை எடுக்கலாம், வழிமுறை இதோ 

அடிப்படை சம்பளம் எவ்வளவு உயரும்

அகவிலைப்படியில் 4 சதவீத உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்ததால், ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். 4 சதவீத டிஏ அதிகரிப்புக்கு பின்னர், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்ற கணக்கீட்டை இங்கே காணலாம்: 

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ 21,622/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைபப்டியில் ஏற்றம் 21,622-19,346 = ரூ 2276/மாதம் அதிகரித்தது
5. ஆண்டு ஊதிய உயர்வு 2276 X12 = ரூ 27,312

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு

1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைபப்டியில் ஏற்றம் 6840-6120 = ரூ. 720
5. ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ 8640

மேலும் படிக்க | வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News