7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central government employees) மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்கான (DA Hike) காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இந்த பணத்தை அரசு விரைவில் ஊழியர்களின் கணக்கில் நேரடியாக செலுத்த உள்ளது. ஏஐசிபிஐயின் (AICPI - All India Consumer Price Index) இதுவரையான புள்ளி விவரங்களில் இருந்து இந்த முறையும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தப் போகிறது என்பது தெளிவாகிறது. அதாவது, இனி ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். இதன் மூலம் உங்கள் சம்பளத்தில் எவ்வளவு உயரவு இருக்கப்போகிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடிப்படை சம்பளத்தில் கணக்கீடு செய்யப்படுகிறது
அகவிலைப்படி கணக்கீடு எப்போதும் அடிப்படை சம்பளத்தில்தான் செய்யப்படுகிறது. ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.20,000 எனில், அகவிலைப்படியில் (Dearness Allowance) மட்டுமே இதை கணக்கிடப்படும். அகவிலைப்படியில் 4% உயர்வு இருந்தால், ஊழியரின் சம்பளம் மாதம் சுமார் ரூ.800 ஆக அதிகரிக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission டிஏ ஹைக்: ஊதியத்தில் அதிரடி உயர்வு.. நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பு



உங்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்
>> அடிப்படை சம்பளம் (BasicPay) - ரூ 31550
>> புதிய அகவிலைப்படி (DA / Dearness Allowance) - 46 சதவீதம் - ரூ 14513/மாதம்
>> தற்போதைய அகவிலைப்படி (DA / Dearness Allowance) – 42 சதவீதம் – Rs 13251/மாதம்
>> 4 சதவீத அகவிலைப்படியை (DA / Dearness Allowance) உயர்த்தினால் - ரூ 1262 (ஒவ்வொரு மாதமும்) அதிகமாக வரும்.
>> ஆண்டு அகவிலைப்படி - 4 சதவீதம் அதிகரிப்பில் ரூ. 15144 கூடுதலாக கிடைக்கும்
>> மொத்த வருடாந்திர அகவிலைப்படி - ரூ 1,74,156 (46 சதவீதம்).


அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்
7வது ஊதியக் குழுவின் (7th pay matrix) படி, சிறிய கிரேடு ஊழியர்கள் முதல் ஆபிசர் கிரேடு வரை அனைவருக்கும் சம்பள உயர்வு ஏற்படும். தற்போது, ​​ஜூலை மாதத்தில் உயரும் அகவிலைப்படியின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் அரசால் அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகின்றது.



ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) குறித்தும் நல்ல செய்தி வெளியாகும்
இதற்கிடையில் மோடி அரசு மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) குறித்து நல்ல செய்தியை வழங்க முடியும், இது தொடர்பாக ஊழியர்கள் இடையே அதிகளவில் விவாதிக்கப்படுகிறது. இது நடந்தால், மழைக்காலத்தில், ஊழியர்களுக்கு இரண்டு பரிசுகள் கிடைக்கும். இருப்பினும் இது குறித்தும் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், ஊடக அறிக்கைகளில் பெரிய கூற்றுக்களை வைத்து வருகின்றது.


அதன்படி மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57ல் இருந்து 3.00 சதவீதம் அல்லது 3.68 சதவீதமாக உயர்த்தப்படலாம். மக்களவைத் தேர்தல் 2024-ல் நடைபெற உள்ளதால் 2026-ம் ஆண்டு முதல் இதை அமல்படுத்தலாம். ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரிப்பால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும். அதாவது, அவர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,000 வரை உயர்த்தப்படும். இதன் மூலம் 52 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். 


மேலும் படிக்க | 7th Pay Commission: வாவ்!! ஊழியர்களுக்கு மத்திய அரசின் 4 பரிசுகள்... குஷியில் ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ