EPS Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF), பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தைப் பெற EPFO ​​மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. EPFO மூலம் நிர்வகிக்கப்படும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) ஒரு வகையான ஓய்வூதியத் திட்டமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கத்தால் வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஓய்வு பெறுவதற்குள் சந்தாதாரர்களிடம் ஒரு பெரிய நிதி சேகரிக்கப்படுகிறது.


இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் (EPFO Members) மாதா மாதம் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. பணியாளர் பங்களிக்கும் தொகை முழுதாக இபிஎஃப் கணக்கில் (EPF Account) செல்கிறது. எனினும், நிறுவனம் அளிக்கும் பங்களிப்பு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுகிறது. இதில் ஒரு பகுதி, அதாவது 8.33 சதவீதம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS), மீதமுள்ள 3.67 சதவீதம் இபிஎஃப் -க்கும் செல்கிறது.


இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு (EPFO Subscribers) பொதுவாக மனதில் எப்போதும் ஒரு கேள்வி இருப்பதுண்டு. ஓய்வு பெற்ற பிறகு EPS திட்டத்தின் கீழ் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இதற்கான விடையை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். ஓய்வூதியத்தை எளிதாகக் கணக்கிடக்கூடிய ஒரு சூத்திரத்தைப் பற்றி இங்கே காணலாம். 


இபிஎஸ் ஃபார்முலாவைத் தெரிந்துகொள்வதற்கு முன், ஓய்வூதியத்தின் பலனைப் பெற, பணியாளர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு இபிஎஸ்-இல்  பங்களிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். அதாவது 10 வருடங்கள் வேலை செய்து, இதில் பங்களிப்பு அளித்தால்தான், இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற முடியும். அதிகபட்ச ஓய்வூதிய சேவை 35 ஆண்டுகள் ஆகும்.


EPS: ஓய்வூதியத்தை கணக்கிடுவது எப்படி?


EPS= சராசரி சம்பளம் x ஓய்வூதிய சேவை/70
(EPS= Average salary x Pensionable service/70)


சராசரி சம்பளம்= அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி
(Average salary= Basic salary and dearness allowance).


ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை= பணியாளர் வேலை செய்யும் ஆண்டுகளின் கணக்கு.


மேலும் படிக்க | ஐடிஆர் தாக்கல் செய்தவுடன் சரியாக ITR Refund கிடைக்க இதை செய்ய மறக்காதீர்கள்: செக் செய்யும் வழிமுறை இதோ


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு பணியாளரின் சராசரி சம்பளம் ரூ.15,000 என்று வைத்துக்கொள்வோம். அவர் 35 ஆண்டுகள் வேலை செய்திருந்தால், அவருக்கு ஓய்வூதியமாக எவ்வளவு கிடைக்கும்? இதை ஒரு ஃபார்முலாவின் உதவியுடன் எளிதாகக் கணக்கிடலாம்.


சூத்திரத்தின்படி, சராசரி சம்பளம் x ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை / 70 
அதாவது,
 15000 x35 /70 = மாதம் ரூ 7,500 ஓய்வூதியம்.


இந்த ஃபார்முலா 15 நவம்பர் 1995 க்குப் பிறகு ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு முந்தைய ஊழியர்களுக்கான விதிகள் வேறு.


இந்த விதிகளையும் மனதில் கொள்வது நல்லது:


- 58 வயது நிரம்பிய ஊழியர்களுக்கு மட்டும்தான் ஓய்வூதிய பலன் கிடைக்கும். 
- ஆனால் 'எர்ளி பென்ஷன்' வசதியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், ஊழியர்கள் ஓய்வூதியத்தின் பலனை முன்கூட்டியே பெற முடியும். 
- 'எர்ளி பென்ஷனில்' 50 வயதிலேயே ஓய்வூதியத்தின் பலனைப் பெற முடியும். 
- எனினும், 'எர்ளி பென்ஷனில்' 4 சதவிகிதம் கழிப்புடன் ஓய்வூதியம் கிடைக்கும்.
- அதாவது 56 வயதில் ஒருவர் 'எர்ளி பென்ஷன்' ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், அடிப்படைத் தொகையில் 92 சதவீதம் மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கும்.
- 58 வயதுக்குப் பிறகு சாதாரண ஓய்வூதியத் தொகையைப் பெறலாம். 


மேலும் படிக்க | சிலிண்டர் விலை, ஐடிஆர், கூகுள் மேப்ஸ்....: ஜூலை 1 முதல் முக்கிய மாற்றங்கள், நோட் பண்ணுங்க மக்களே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ