SIP Investment: முதலீட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தங்கள் வாழ்வின் துவக்க நிலைகளிலேயே அதற்கான அடித்தளத்தை அமைப்பது அவசியமாகும். எனினும், எந்த வயதில் தொடங்கினாலும், அதை திட்டமிட்டு நன்றாகத் தொடங்கினால், நமது இலக்குகளை கண்டிப்பாக அடைய முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விரைவாக பணம் ஈட்டும் வழிகளில் ஈக்விடி பங்குகள் மிக பிரபலமான முறையாக பார்க்கப்படுகின்றன. எனினும் இவற்றில் ஆபத்தும் அதிகம் உள்ளது. நேரடியாக பங்குகளில் பணத்தை முதலீடு செய்ய விரும்பாத நலர்கள், மியூசுவல் ஃபண்டுகளின் மூலம் தங்கள் முதலீட்டை துவக்கலாம். இதற்கு பெரிய முதலீடு தேவையில்லை. சிறிய SIP -கள் மூலம் இதை தொடங்கலாம். 


எனினும், நீங்கள் ஒரு பெரிய கார்பஸை உருவாக்க விரும்பினால், அதன் சூத்திரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த SIP ஃபார்முலாவை நீங்கள் புரிந்துகொண்டு பின்பற்றினால், உங்கள் பணம் பகலில் இரட்டிப்பாகவும் இரவில் நான்கு மடங்காகவும் அதிகரிக்கும் வகையில் வருமானம் கிடைக்கும். 


உங்கள் முதலீட்டை எவ்வாறு திட்டமிடுவது?


நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க விரும்பினால், நீண்ட கால உத்தி சிறப்பாக செயல்படும். இதற்கு உங்கள் வருவாயில் இருந்து தேவையான செலவுகளைக் கழித்து, தினசரி ரூ.100 மட்டும் சேமித்தால் போதும். இந்த சேமிப்பை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டும். முறையான முதலீட்டுத் திட்டம் ( Systematic investment plan) உங்கள் பணத்திற்கு சரியான திசையைக் கொடுக்கும். மேலும் இது உங்கள் பணத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.


SIP ஐ ரூ 3000 இலிருந்து தொடங்குங்கள்


நீங்கள் ஒரு பெரிய நிதியை விரும்பினால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதில் ஒரு முதலீட்டாளர் தனது 30 வயதில் 3000 ரூபாய் முதல் முதலீடாகச் செய்து 30 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், ஒரு பெரிய நிதியை உருவாக்கலாம் என முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகிறார்கள். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) முதலீடு செய்வது நன்மை பயக்கும்.


மேலும் படிக்க | Budget 2024: சாமானியர்களுக்கு நிராவணம் தரும் அறிவிப்புகள் வருமா? நிதி அமைச்சர் கூறியது என்ன?


எஸ்ஐபி -இன் மிகவும் துல்லியமான சூத்திரம் (SIP Formula) 


இதற்கு 30 ஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் 15% மதிப்பீட்டைப் பெற்றால், கோடீஸ்வரர் ஆவதற்கான பாதை எளிதாகிவிடும். இதில் உள்ள மிகப்பெரிய பலன் காம்பவுண்டிங் ஆகும். அதாவது, 30 ஆண்டுகளில் 15% உடன் கூட்டு வட்டியின் பலனைப் பெறுவீர்கள். ஆனால், மிக முக்கியமானது இதன் மிகவும் துல்லியமான சூத்திரம்தான். இது SIP க்கு மதிப்பு சேர்க்கும். இந்த சூத்திரம் ஸ்டெப் அப் எஸ்ஐபி (Step Up SIP). நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒவ்வொரு ஆண்டும் 10% ஸ்டெப்-அப் விகிதத்தை பராமரிக்க வேண்டும்.


கோடீஸ்வரர் ஆவது எப்படி?


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒருவருக்கு 30 வயதாகிறது என வைத்துக்கொள்வோம். அவர் தினமும் 100 ரூபாய் சேமித்து SIP இல் முதலீடு செய்கிறார். 30 ஆண்டுகளுக்கான நீண்ட கால உத்தியுடன் இது செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10% ஸ்டெப்-அப் செய்து கொண்டே இருக்க வேண்டும். 3000 ரூபாயில் ஆரம்பித்தால் அடுத்த வருடம் 300 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்வுத் தொகை ரூ. 4,17,63,700 ஆக இருக்கும். எஸ்ஐபி கால்குலேட்டரின் (SIP Calculator) படி, 30 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.59,21,785 ஆக இருக்கும். ஆனால், இங்கு வெறும் ரிட்டர்ன் மூலம் ரூ.3 கோடியே 58 லட்சத்து 41 ஆயிரத்து 915 லாபம் கிடைக்கும். SIP இல் வருமானம் தரும் மந்திரம் இதுதான். இந்த வழியில், மிகத் துல்லியமான ஃபார்முலாவான ஸ்டெப்-அப் உதவியுடன், உங்களுக்கு ரூ.4 கோடியே 17 லட்சம் என்ற பெரும் நிதி கிடைக்கும்.


மேலும் படிக்க | பெண்களுக்கு வீட்டுக்கடன் வழங்க காத்திருக்கும் இந்தியா! மகளிருக்கு மரியாதை தரும் கடன் வழங்குநர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ