7th Pay Commission: மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்களுக்கும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அகவிலைப்படி DA மற்றும்  DR ஆகியவற்றை உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய 28 சதவீத பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன மூலம் மத்திய அரசின் (central Government) ஊழியர்களின் DA 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக உயரும். எனினும் இந்த விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதிகாரபூர்வமான தகவலுக்காக மத்திய அர்சௌ ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


முன்னதாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாளர் கூட்டமைப்பு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு (Nirmala Sitaraman) அரசாங்க கருவூலத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் அளித்ததாகவும், தற்போதைய பணவீக்கத்தின் அடிப்படையில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ வை அதிகரிக்குமாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. 28 சதவீத வீதம்.


கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 2021 ஜூலை வரை 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவு மற்றும் நிவாரண தொகையை 2020 ஏப்ரல் மாதத்தில் மத்திய நிதி அமைச்சகம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. 


COVID-19 நெருக்கடி காரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஜனவரி, 1 2020 முதல் செலுத்த வேண்டிய டிஏ மற்றும் டிஆர்-ன் கூடுதல் தவணை வழங்கப்படாது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 முதல் செலுத்த வேண்டிய டிஏ மற்றும் டிஆரின் கூடுதல் தவணையும் செலுத்தப்படாது என்றும் கூறப்படுகிறது.


ALSO READ | விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் முக்கிய குறிக்கோள்: அமித் ஷா


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR