நாட்டில் வணிகம் செய்வதை ஊக்குவிப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை தளர்த்துவதற்காக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், முறையாக வணிக விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், தொழில்முனைவோரை சிறைக்கு அனுப்பும் 26 ஆயிரத்து 134 தண்டனை விதிகள் உள்ளன என்று சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை பரிந்துரைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Observer Research Foundation (ORF) உடன் TeamLease RegTech தயாரித்த அறிக்கையின்படி, வணிகம் செய்வதற்கான ஐந்து விதிகளில் இரண்டிற்கு இணங்காத ஒரு தொழிலதிபரை அது சிறைக்கு அனுப்பலாம் என தெரிவிக்கிறது.


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் பாதிப்பு?


இந்தியாவில் 69,233 தனிப்பட்ட ஒழுங்குமுறை விதிகள் உள்ளன, அவை நாட்டில் வணிகம் செய்வதை ஒழுங்குபடுத்துகின்றன. இதில் 26 ஆயிரத்து 134 பிரிவுகள் சிறைத்தண்டனை விதிகளைக் கொண்டுள்ளன. இதன் பொருள், ஐந்து விதிகளில் கிட்டத்தட்ட இரண்டு ஒரு தொழிலதிபரை சிறைக்கு அனுப்பலாம் என்பதாகும். அதிகப்படியான விதிகள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கவலையளிக்கின்றன என்று அறிக்கை கூறுகிறது. 150க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒரு பொதுவான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில், ஒரு வருடத்தில் 500-900 ஒழுங்குமுறை விதிகளை எதிர்கொள்ள ஒரு வருடத்திற்கு ரூ. 12 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை செலவாகும்.


மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டுகளை காணவில்லையா... ரிசர்வ் வங்கியின் ரியாக்சன் என்ன?


அதிகரிக்கும் விரிசல்


"இந்த ஒழுங்குமுறை மீறல் லாபத்திற்காக இயங்கும் தொழில்முனைவோரை மட்டுமல்ல, இலாப நோக்கற்ற நிறுவனங்களையும் பாதிக்கிறது. நாட்டிற்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும், அவற்றை உருவாக்கும் தொழில்முனைவோரை அரசு எவ்வாறு பார்க்கிறது என்பதற்கும் இடையே அதிகரித்துக்கொண்டே செல்லும் இடைவெளி உள்ளது" என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


மோனோகிராஃப் என்பது வணிக இணக்க தரவுகளின் முதல்-வகையான ஒருங்கிணைப்பு ஆகும், இது இன்றுவரை அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மட்டுமே உள்ளது என்று TeamLease RegTech அறிக்கையில் தெரிவித்துள்ளது. மோனோகிராஃப் ஏழு பரந்த களங்களாக தரவை வகைப்படுத்தியுள்ளது. தொழிலாளர், நிதி மற்றும் வரிவிதிப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, செயலகம், வணிகம், தொழில் சார்ந்தது மற்றும் பொதுவானது.


'ஊழலை வளர்க்கிறது'


"இந்தியாவின் முதலாளித்துவ இணக்க அதிகப்படியானது குற்றமயமாக்கல், ஊழலை வளர்க்கிறது, முறையான வேலைவாய்ப்பை மழுங்கடிக்கிறது மற்றும் நீதியை விஷமாக்குகிறது" என்று TeamLease நிறுவன துணைத் தலைவர் மணீஷ் சபர்வால் தெரிவித்துள்ளார். 


"இந்த அறிக்கை செயல்படக்கூடிய சீர்திருத்தங்களுக்கான யோசனைகளுக்கு ஒரு அற்புதமான பங்களிப்பாகும்; அரசாங்கம் விதிகளை பரிசீலிப்பதல் ஒரு நல்ல தொடக்கத்தை எடுத்துள்ளது. ஆனால் உண்மையிலேயே ஒழுங்குபடுத்தும் விதிகளை குறைக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் 26 ஆயிரத்து 134 சிறை விதிகளை வடிகட்டும் அந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் படிக்க | 72% ரூ. 2000 நோட்டுகள் திரும்ப வந்துவிட்டன... மொத்தம் எவ்வளவு மதிப்பு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ