முக்கிய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையில் இரட்டை இலக்க சரிவை அறிவித்துள்ளனர். ஆனால் இந்த பொருளாதார வீழ்ச்சி மகாராஷ்டிராவின் தெஹ்ஸில் உள்ள வெங்காய விவசாயிகளை தடுக்கவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் ஏற்றம் கண்ட வெங்காய விலை, மகாராஷ்டிரா விவசாயிகளை ஒரே நாளில் 250 டிராக்டர் வாங்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளது.


பண்டிகை காலம் தொடங்கிய போதிலும், வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவை உயர்த்தத் தவறிய போதிலும், நவராத்திரியின் முதல் நாளில் இந்த கொள்முதல் நடைப்பெற்றுள்ளது.


நாசிக் மாவட்டத்தின் கல்வான் தாலுகாவில் சில விவசாயிகள் வெங்காயத்தை விற்பனை செய்வதன் மூலம் இவ்வளவு சம்பாத்தியம் பெற்றனர் எனவும், தங்கள் வியாபாரத்தில் கிடைத்த லாபத்தின் மூலம் கடந்த செப்டம்பர் 29 அன்று 250 டிராக்டர்களை வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த ஐந்து ஆண்டுகளில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ .100 முதல் ரூ .500 வரை இருந்த வெங்காய விலை இந்த ஆண்டு சுமார் ரூ .2,000 முதல் ரூ .4,000 வரை (இரண்டு மாதங்களுக்கு) சென்றது. இது மாவட்டத்தில் ஒரு பெரிய வெங்காயம் வளரும் பிராந்தியமான பழங்குடி கல்வான் தாலுகாவில் விவசாயிகளுக்கு வளமான ஈவுத்தொகையைப் பெற்றது தந்துள்ளது.


இந்த லாபத்தின் மூலம் 250 டிராக்டர்கள் தவிர, 21 கார்கள் மற்றும் சுமார் 400-500 இருசக்கர வாகனங்களும் ஒரே நாளில் விற்பனை செய்யப்பட்டதாக ஒரு ஆட்டோமொபைல் வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஒரே நாளில் ரூ .30 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டது எனவும், பரிவர்த்தனையில் 70 சதவீதம் ரொக்கமாக இருந்தது எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


குறிப்பிட்ட இந்த கிராமத்தில் இருந்து அதிகளவு வாகனங்கள் வாங்கப்பட்ட நிலையில், விற்பனையாளர்கள் கூட்டாக சென்று விழா எடுத்து வாகனங்களை விவசாயிகளுக்கு அளித்துள்ளனர். அமர்கலமாக நடைப்பெற்ற இந்த விழாவினை தொடர்ந்து வாகன பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளது.