உங்களிடம் ரேஷன் கார்டு இருந்தால், நீங்கள் அரசின் ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரேஷன் விதிகளில் அரசால் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இனி பயனாளிகள் ரேஷனைப் பெற ஒரு முறை அல்ல, இரண்டு முறை கட்டை விரலை ஸ்கேன் செய்ய வைக்க வேண்டும். இந்த மாற்றத்தை மத்திய பிரதேச அரசு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் மாதத்திலிருந்து புதிய விதிமுறை
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஒவ்வொருவருக்கும் 5-5 கிலோ உணவு தானியங்களை மத்திய மற்றும் மத்திய பிரதேச அரசுகள் வழங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், பயனாளி தனது கட்டைவிரலை மத்திய மற்றும் மாநில அரசின் பெயரில் இரண்டு முறை வைக்க வேண்டும். தற்போது, ​​பொது விநியோக அமைப்பு மையத்தில் கட்டைவிரலைப் பயன்படுத்தினால் மட்டுமே ரேஷன் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அக்டோபர் மாதத்திலிருந்து இந்த முறையில் சில மாற்றத்தை அரசு செய்துள்ளது.


மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!


இரண்டு முறை கட்டைவிரல் வைக்க வேண்டும்
இனி பயனாளிகள் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெறும் ரேஷனுக்கு தனித்தனியாக இரண்டு முறை கட்டைவிரலை வைக்க வேண்டும். மத்தியப் பிரதேச அரசின் இந்த விதி மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைக்குப் பிறகு, கடை நடத்துபவர் முன்பை விட ரேஷன் விநியோகத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மத்திய பிரதேசத்தில், மாநில அரசால் பயனாளிகளுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 5 கிலோ ரேஷன் வழங்கப்படுகிறது. இரண்டு ரேஷன்களும் கட்டுப்பாட்டு கடையில் இருந்து விநியோகிக்கப்படுகின்றன. இதுவரை, பயனாளிகள் கட்டை விரலை வைத்தவுடன் ரேஷன் பெற்று வந்தனர். ஆனால் இப்போது இரண்டு ரேஷனையும் பெறுவதற்கு இரண்டு முறை கட்டை விரலை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ