Senior Citizens Savings Scheme: பணத்திற்கான தேவை இல்லாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொரு வயதிலும் இதற்கான காரணம் வேறுபடும். பணம் ஈட்டும் வழியும் வேறுபடும். குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு பெரிய இருப்பு அல்லது நிலையான வருமானம் என்பது மிகவும் அவசியமாகிறது. பொதுவாக, பணி ஓய்வின் போது கிடைக்கும் மொத்தத் தொகையை வங்கிக் கணக்கில் போட்டு அதில் கிடைக்கும் வருமானத்தை மூத்த குடிமக்கள் பயன்படுத்துகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், இப்படி கிடைக்கும் மொத்த தொகையை, அதிக லாபம் பெறும் திட்டத்தில் முதலீடு செய்வது இன்னும் நல்லது. அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். தபால் அலுவலக சேமிப்பு திட்டமான இதில், பாதுகாப்பான வழியில் நல்ல வருமானத்தை பெறலாம். இத்திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு நல்ல வட்டியும் அளிக்கப்படுகின்றது. இந்தத் திட்டம் குறித்த சில முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் காணலாம். 


SCSS: இதில் கிடைக்கும் வட்டி எவ்வளவு?


இந்த திட்டத்தில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு வைப்புத் திட்டமாகும். இதில், முதலீட்டாளர்கள் ஒரு நிலையான தொகையை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்கிறார்கள். மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30,00,000 வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1000 ஆகும். தற்போது, ​​மூத்த குடிமக்கள் (Senior Citizens) சேமிப்பு திட்டத்தில் 8.2 சதவீத வட்டி (Interest Rate) கிடைக்கின்றது. 


SCSS: வட்டியிலேயே பம்பர் வருமானம் 


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்ச தொகையான ரூ.30,00,000 -ஐ 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்கிறார் என வைத்துக்கொள்ளலாம். இந்த தொகைக்கு 8.2% என்ற விகிதத்தில் ரூ.12,30,000 வட்டித்தொகை கிடைக்கும். ஒவ்வொரு காலாண்டிலும் வட்டியாக ரூ.61,500 வரவு வைக்கப்படும். இந்த வகையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளருக்கு முதிர்வுத் தொகையாக மொத்தம் ரூ.42,30,000 கிடைக்கும். 


மேலும் படிக்க | இன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம், Belated ITR தாக்கல் செய்வதற்கான வழிமுறை இதோ


இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், தற்போதைய 8.2 சதவீத வட்டியின்படி, 5 ஆண்டுகளில் வட்டியாக மட்டும் ரூ.6,15,000 கிடைக்கும். காலாண்டு அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ரூ.30,750 வட்டி கிடைக்கும். இதன் மூலம் ரூ.15,00,000 மற்றும் வட்டித் தொகை ரூ.6,15,000 சேர்த்து மொத்தம் ரூ.21,15,000 முதிர்வுத் தொகையாகக் கிடைக்கும்.


SCSS: இந்த திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?


- 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் இதில் முதலீடு செய்யலாம். 


- விஆர்எஸ் எடுக்கும் சிவில் துறை அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகின்றது.


- இந்த திட்டம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது. 


- 5 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தின் பலன்களைத் தொடர விரும்பினால், டெபாசிட் தொகை முதிர்ச்சியடைந்த பிறகு, கணக்குக் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வசதி உள்ளது. 


- முதிர்வு காலத்தை நீட்டிப்பதற்கான விண்ணப்பம் முந்தைய ஆண்டிலேயே கொடுக்கப்பட வேண்டும்.


- நீட்டிக்கப்பட்ட கணக்கிற்கான வட்டி முதிர்வு தேதியில் பொருந்தக்கூடிய விகிதத்தில் கிடைக்கும். 


-  SCSS இல் பிரிவு 80C இன் கீழ் வருமான வரி விலக்கின் பலன் கிடைக்கிறது.


மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் செய்ய புதிய விதிகள் அறிமுகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ