இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியத்திலிருந்து பல வங்கிகள் தங்களது ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் (ஆர்எல்எல்ஆர்) மற்றும் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) ஆகியவற்றை உயர்த்தியுள்ளன.  ஆர்எல்எல்ஆர் மற்றும் எம்சிஎல்ஆர் உயர்த்தப்பட்டதன் காரணமாக மாதாந்திர தவணைகளின் (இஎம்ஐ) விலையும் உயரப்போகிறது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தும்போது, ​​அது வங்கிகளுக்கான நிதிச் செலவை அதிகரிக்கிறது, அதாவது ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கு வங்கிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.  இதன் காரணமாக வங்கிகளும் அதன் செலவினங்களை தவிர்க்க கடனுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்து இருக்கிறது, தற்போது எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடைக்காது


ஹெச்டிஎஃப்சி வங்கி :


ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் கடன் விகிதத்தை நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் (எம்சிஎல்ஆர்) மார்ஜினல் செலவைப் பொறுத்து உயர்த்தியுள்ளது.  ஹெச்டிஎஃப்சி வங்கியின் இணையதளத்தின்படி, நவம்பர் 7, 2022 முதல் ஒரே இரவில் 7.90 சதவீதமாக இருந்த எம்சிஎல்ஆர் 8.20 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஒரு மாதத்திற்கான எம்சிஎல்ஆர் 7.90 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதம் அதிகரித்துள்ளது.


கனரா வங்கி :


கனரா வங்கி அதன் ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட்டை (ஆர்எல்எல்ஆர்) திருத்தியுள்ளதோடு, நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தையும் (எம்சிஎல்ஆர்) உயர்த்தியுள்ளது.  வங்கி அனைத்து காலங்களிலும் எம்சிஎல்ஆர்-ஐ 20 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியுள்ளது.  கனரா வங்கி ஒரே இரவில் மற்றும் ஒரு மாத எம்சிஎல்ஆர் மீதான விகிதங்களை 7.05 சதவீதத்தில் இருந்து 7.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.


மகாராஷ்டிரா வங்கி :


தவணைக்கால கடன்களுக்கான எம்சிஎல்ஆர்-ஐ அதிகப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா வங்கி தெரிவித்துள்ளது.  வாகனம், தனிநபர் மற்றும் வீடு போன்ற பெரும்பாலான நுகர்வோர் கடன்களின் விலைக்கு பயன்படுத்தப்படும் ஒரு வருட எம்சிஎல்ஆர் அளவுகோல், 7.80 சதவீதத்தில் இருந்து 7.90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  ஒரு மாத எம்சிஎல்ஆர் 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 7.50 சதவீதமாக உள்ளது.


டிசிபி வங்கி :


டிசிபி வங்கி 27 அடிப்படைப் புள்ளிகளால் எம்சிஎல்ஆர்-ஐ திருத்தியுள்ளது, பெஞ்ச்மார்க் ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதம் 10.23 சதவீதமாக உள்ளது.  ஒன்று, மூன்று மற்றும் ஆறு மாத கால எம்சிஎல்ஆர்கள் முறையே 9.63 சதவீதம், 9.79 சதவீதம் மற்றும் 10.02 சதவீதம் என திருத்தியமைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | உஷார்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே! இதை நம்பி ஏமாற வேண்டாம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ