புது டெல்லி: ஊரடங்கு தொடங்கியவுடன், நாம் அனைவரும் வீட்டில் முடக்கப்பட்டதால் நம் கையே நமக்கு உதவி என அதிக நேரம் செலவழித்திருக்கிறோம் என்ற உண்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது. நாட்டில் ஊரடங்கு மார்ச் 25 அன்று வந்தபோது, சுமார் ​1.3 பில்லியன் இந்தியர்களை வீட்டிற்குள் அடைத்து வைத்தது. பலரால் தங்கள் ஜோடிகளை சந்திக்க முடியவில்லை. இதனால் காதல் (LOVE), காமம் (SEX) உட்பட பல லவ் ரொமான்டிக்ஸ் தடைபட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமாக ஜோடி இல்லாமல் தனியாக இருக்கும் பலர் தங்கள் கைகளில் சில பொருட்களை எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். மிகவும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால், ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில், பாலியல் பொம்மைகளின் விற்பனை வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது. அதாவது 64% அளவிற்கு செக்ஸ் பொருட்கள் விற்பனை ஆகியுள்ளது.


ALSO READ | உடலுறவு கொள்ளும்போது நமது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்


விற்பனை மற்றும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பாலியல் பொம்மை சந்தை ஊரடங்கு காலத்தில் விற்பனையில் பெரும் ஏற்றம் கண்டுள்ளது என்பதை, உண்மையில், கொரோனா காரணமாக பொருளாதாரத்தின் மந்த நிலையில் பாதிக்கப்படாத சில தொழில்களில் இதுவும் ஒன்று என்பதை சுட்டிக்காட்டுகின்றன.


பாலியல் தயாரிப்புகளின் பகுப்பாய்வு செய்யும் இந்தியா அன்கவர்ட் என்று அழைக்கப்படும் தட்ஸ்பர்சனலின் (ThatsPersonal) அறிக்கை, பாலியல் தயாரிப்பு சந்தைக்கு ஊரடங்கு காலம் மிகவும் சாதகமாக அமைந்தது என்பதற்கு, நாடு தழுவிய நெருக்கடிக்கும் மத்தியில் செக்ஸ் பொம்மைகளின் விற்பனை அமோகமாக இருந்து என்பதை நிரூபித்தது.


ALSO READ |  COVID-19: சுயஇன்பம் செய்யுமாறு சுகாதார அதிகாரிகள் வழியுறுத்தல்..!


கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவின் தலைநகரம் மும்பை, செக்ஸ் பொம்மைகளின் விற்பனை என வரும்போது, உச்ச நிலையில் (sale of sex toys) உள்ளது. பெங்களூரு, புது டெல்லி, புனே, சென்னை ஆகிய நகரங்கள் அடுத்தடுத்து வருகிறது. அதேபோல பாண்டிச்சேரியில் அதிக எண்ணிக்கையிலான மறு ஆர்டர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.


பாலியல் பொம்மைகளை வாங்குபவர்களில் 64 சதவீதத்தில் ஆண்கள் பெரும்பான்மையானவர்கள் உள்ளனர் என்றாலும், பெண்களும் பின் தங்கவில்லை. உண்மையில், பானிபட், ஷில்லாங், இம்பால், பட்டீண்டா, ஹரித்வார், பனாஜி, புதுச்சேரி, தேஸ்பூர், மற்றும் ரூர்கேலா போன்ற நகரங்களில் பெண்கள் ஆண்களை விட அதிகமான செக்ஸ் பொம்மைகளை (Woman Sex Toys) வாங்கி உள்ளனர் என புள்ளிவிவரம் காட்டுகிறது.


ALSO READ |  Video: நிர்வாணமாக 'UBER' டாக்ஸியில் உடலுறவில் ஈடுபட்ட பிரபல நடிகை..!


பாலியல் பொம்மைகளின் விற்பனை அதிகரிக்க, பெரும்பாலும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண் சுயஇன்பத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது தான் காரணமாக இருக்கலாம். உதாரணமாக, "Lust Storie" போன்ற படங்கள் மூலம் பாலியல் பொம்மைகளின் விற்பனையை 54% அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.


எங்கும் செல்ல முடியாத நிலையில், எதுவும் செய்ய முடியாத நிலையில், இந்தியர்கள் தங்கள் கைகளில் இருக்கும் நேரத்தை வெவ்வேறு வகையான இன்பங்கள் மூலம் பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது.


ALSO READ | தனக்கு நடந்த மார்பக அறுவை சிகிச்சை வீடியோவை வெளியிட்ட மியா கலிஃபா!!