கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​சைவ உணவின் விலை ஒன்பது சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், அசைவ உணவின் விலை ஏழு சதவீதம் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தை விட, மே மாதத்தில், காய்கறிகளின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில், வீட்டில் தயாரிக்கப்படும் உணவின் அடக்க விலை மே மாதத்தில் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் அசைவ உணவின் விலை றைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்தை ஆய்வு மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனமான CRISIL வியாழக்கிழமை வெளியிட்ட "Roti Rice Rate" அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Roti Rice Rate ரிப்போர்ட் என்ன சொல்கிறது?


கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், சைவ உணவின் விலை ஒன்பது சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அசைவ உணவின் விலை ஏழு சதவீதம் குறைந்துள்ளதாகவும் CRISIL நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு தட்டு உணவின் விலை ரூ.27.8 ஆகவும் (ஏப்ரல் மாதம் ரூ. 27.4) அசைவ உணவின் விலை ரூ.55.9 ஆகவும் (ஏப்ரல் மாதம் ரூ. 56.3) இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு தட்டு உணவின் விலை எப்படி தீர்மானிக்கப்படுகிறது?


உணவு தயாரிப்பதற்கான செலவைக் கணக்கிட, உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி உட்பட அனைத்து காய்கறிகள், அரிசி, பருப்பு வகைகள், தயிர் என உணவு தயாரிக்க தேவையான பொருட்களின் விலைகளை கணக்கில் கொள்கிறது. இதுவே அசைவ உணவு தட்டுக்கு பருப்புக்குப் பதிலாக கோழி சேர்க்கப்பட்டது.


மேலும் படிக்க | Modi 3.0: பாஜகவின் கூட்டணி ஆட்சியின் முதல் 100 நாட்களுக்கான திட்டம்! இது CLSAவின் கணிப்பு


சைவ உணவின் விலை உயர்ந்தது ஏன்?


ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் சைவ உணவின் விலை சிறிதளவு அதிகரித்ததற்கு உருளைக்கிழங்கின் விலை ஒன்பது சதவீதம் அதிகரித்ததே முக்கியக் காரணம் என கடன் மதிப்பீட்டு நிறுவனம் கிரிசல் தெரிவித்துள்ளது. மற்ற பொருட்களின் விலைகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் இல்லை.


"செலவில் 50 சதவீதமாக இருக்கும் கோழிக்கறியின் விலை, இரண்டு சதவீதம் குறைந்துள்ளதால், அசைவ உணவின் விலை குறைந்துள்ளது' என, கிரிசில் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு மே மாதம் வீட்டில் தயாரிக்கப்பட்ட சைவ உணவு ஒன்றின் விலை ரூ.25.5 ஆகவும், அசைவ உணவின் விலை ரூ.59.9 ஆகவும் இருந்தது. தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் கடந்த ஆண்டை விட முறையே 39 சதவீதம், 41 சதவீதம் மற்றும் 43 சதவீதம் அதிகரித்ததால், சைவ உணவின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.


மேலும் படிக்க | INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்!


மேற்கு வங்கத்தில், அறுவடைக்கு முன்பே உருளைக்கிழங்கு பயிரில் பூச்சி தாக்குதல் மற்றும் பயிர் சேதம் காரணமாக ரபி பருவத்தில் விதைப்பு குறைந்துள்ளதாலும், உருளைக்கிழங்கு வரத்து குறைந்ததாலும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.


அரிசி, பருப்பு விலை உயர்வு
ஒரு சைவ உணவின் விலையில் 13 சதவீதமாக இருக்கும் அரிசியின் விலை ஓராண்டில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. குறைந்த உற்பத்தி காரணமாக, சைவ உணவில் ஒன்பது சதவீதமாக இருக்கும் பருப்பு வகைகளின் விலை, ஆண்டுக்கு 21 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.


அதே நேரத்தில், சீரகம், மிளகாய் மற்றும் தாவர எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கடந்த ஆண்டை விட முறையே 37 சதவீதம், 25 சதவீதம் மற்றும் எட்டு சதவீதம் குறைந்துள்ளது, இதன் காரணமாக சைவ உணவின் விலையில் பெரிய மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.   


மேலும் படிக்க | 'ரூ. 30 லட்சம் கோடி... பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல்... புட்டு புட்டு வைத்த ராகுல் காந்தி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ