புதுடெல்லி: நோயில்லா வாழ்வே அனைவரும் விரும்பும் வாழ்வாக இருக்கும். நிம்மதியான வாழ்க்கைக்கு ஆயுர்வேதம் பல சுலபமான வழிமுறைகளை சொல்கிறது. அதில் ஒன்று தான், தொப்புளில் சில துளி எண்ணெயை விட்டு தேய்த்துவிடுவதால் கிடைக்கும் அளவு கடந்த பலன்கள் ஆகும். இது அபத்தமாகத் தோன்றினாலும், தொப்புளில் எண்ணெய் தடவுவது மிகவும் பழமையான மற்றும் பிரபலமான நடைமுறையாகும். இந்த பழக்கம் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை மட்டுப்படுத்துகிறது. தொப்புளில் தடவும் எண்ணெய்கள் எதுவாக இருந்தாலும் சரி அது பயனளிக்கும். ஆனால் ஆயுர்வேத நடைமுறைகளின்படி, உட்கொள்ளும் போது இது பல ஊட்டச்சத்து பண்புகளைக் கொண்டுள்ள நெய்யே தொப்புளுக்கும் உகந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்புளில் எண்ணெய் தடவினால் அது எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, கருப்பையில் உள்ள குழந்தைக்கு தேவையான அனைத்துமே, தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் பிணைப்பாக இருக்கும் தொப்புள் கொடியின் மூலமாகவே சென்று சேர்கிறது. கருவாக இருக்கும் உயிரை குழந்தையாக வளர ஊட்டமளிப்பது தொப்புள்.


நெய்யால் தொப்புளில் மசாஜ் செய்யும் போது, ​​அதன் சத்துக்கள், ஒருவரின் உடலில் அதே பாணியில் நுழையும். நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தொப்புளின் பங்கு மிகவும் பெரியது. தொப்புளில் எண்ணெய் மசாஜ் செய்வது பல வழிகளில் நன்மை பயக்கும். 


மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்


முடியின் தரத்தை மேம்படுத்துகிறது


வறண்ட கூந்தல் மற்றும் முடி பிளவுபடுதல் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த, தொப்புளில் நெய்யை விட்டு மசாஜ் செய்வது நல்ல பலனளிக்கும். முடி உதிர்தல் அல்லது முடி தொடர்பான வேறு ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், தினசரி சில துளி நெய்யை தொப்புளில் தடவவும். இந்த சிகிச்சை முடியின் தரத்தை மேம்படுத்துவதோடு, முடி உதிர்வை குறைத்து, அதை பளபளக்கச் செய்கிறது.


மூட்டு வலியிலிருந்து நிவாரணம்
ஆயுர்வேதம் மூட்டு வலிக்கு வழங்கும் தீர்வுகளில், எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தப்படுகிறது. தொப்புளில் நெய் தடவுவது, நல்ல பலனைத் தரும். தொப்புளில் எண்ணெய் தடவிப் பாருங்கள், கண்டிப்பாக மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது
மலச்சிக்கல் பிரச்சனை பலருக்கும் பொதுவான பிரச்சினை. ஆனால், தொப்புளில் நெய் தடவினால் மலச்சிக்கலை குணப்படுத்த முடியும். இது மிக விரைவான மற்றும் எளிதான தீர்வாகும். தினமும் தொப்புளில் நெய் தடவி வந்தால், ஒரே வாரத்தில் மலம் இளகி வயிற்று பிரச்சனைகள் தீரும். தொப்புளில் நெய் மசாஜ் செய்வது, மலச்சிக்கலை மட்டுமல்ல, வயிற்று வலியையும் குணப்படுத்துகிறது.


மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது


சருமத்திற்கு நல்லது
தொப்புளில் நெய்யை மசாஜ் செய்வது சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்து, புதிய பொலிவைக் கொடுக்கும். இரவு நேரங்களில் தவறாமல் நெய்யை தொப்புளில் பயன்படுத்துவது, உங்கள் சருமத்தை மிக நீண்ட நேரத்திற்கு ஈரப்பதமாக வைத்திருக்கும், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைக் குறைக்கும் தொப்புள் எண்ணெய் மசாஜ், சருமத்தை மென்மையாக்கும்.


மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம்
தொப்புளில் நெய்யை மசாஜ் செய்வது வயிற்று வலியை குணப்படுத்துவதுபோலவே, மாதவிடாய் வலியில் இருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது. மாதவிடாய் வலிக்காக வலிநிவாரணி மாத்திரைகளைப் போடுவதைவிட தொப்புளில் நெய்யை மசாஜ் செய்வது நல்லது. 


மேலும் படிக்க | தலைமுடி ஆரோக்கியமாக வளர குருமிளகு எண்ணெய்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ