இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் எடையால் பலர் சிரமப்படுகின்றனர், ஆனால் பிஸியான வாழ்க்கை முறை காரணமாக வொர்க்அவுட்டிற்கு நேரம் இருப்பதில்லை, இதனால் தொப்பையை குறைப்பது என்பது கனவாகவே இருக்கிறது. கொரோனா காலத்தில், லாக்டவுன் மற்றும் வீட்டிலிருந்து வேலை போன்றவற்றின் காரணமாக மக்களின் உடல் செயல்பாடுகள் மிகவும் குறைந்துவிட்டன, இது நம் உடலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே எளிமையாக நீங்கள் உடல் எடை குறைக்க விரும்பினால் இங்கு கொடுக்கப்படும் சில டிப்ச்ஸை பின்பற்றினால் போதும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிராம்பு உட்கொண்டால் உடல் எடை குறையும்
பொதுவாக இந்திய சமையலின் முக்கியமான சிறப்பே அதன் மசாலாப் பொருட்கள்தான். இந்திய உணவுகள் உலகம் முழுவதும் பிரபலமான உணவுகளுக்கு அவை ஒரு தனித்துவமான சுவை சேர்க்கின்றன. இந்த குறைந்த கலோரி சுவையூட்டியில் வைட்டமின் ஏ, கே, சி மற்றும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளன. ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் இந்த மசாலா உங்கள் உணவை சுவையாக மாற்றுவதைத் தவிர, கொழுப்பை வேகமாக குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், கிராம்பு பல்வேறு வழிகளில் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.


மேலும் படிக்க | கோடையில் தலைவலியாக உள்ள தலைவலி.. என்ன செய்யலாம்.? 


கிராம்பு எப்படி தொப்பையை குறைக்க உதவுகிறது?
நகங்களை விட சிறியதாக இருக்கும் கிராம்புகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, புரதம், கார்போஹைட்ரேட், ஃபோலேட் மற்றும் டயட்டரி ஃபைபர் ஆகும். இந்த மசாலாவை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது நமது எடையை நேரடியாக குறைக்க உதவுகிறது.


கிராம்பு எவ்வாறு பயன்படுத்துவது?
உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க விரும்பினால், கிராம்பு, சீரகம், இலவங்கப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து, அவற்றை நசுக்கி பொடி செய்து, ஒரு ஸ்பூன் அளவு பொடியை பாத்திரத்தில் வைக்கவும். இந்த பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் சிட்டியை கலந்து, அடுப்பில்  கொதிக்க வைக்கவும். இந்த பானத்தை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், தொப்பை கொழுப்பு வேகமாக குறையும்.


சர்க்கரை நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் கிராம்புகளைச் சேர்த்து, உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம். கிராம்புகளில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் கலவைகள் உள்ளன. எனவே, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கிராம்பை அதிகளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


கிராம்பை தினமும் சாப்பிடலாம்
கிராம்பு எளிதில் கிடைக்கும் மசாலாப் பொருள். இதில் மருத்துவ குணங்கள் அதிகளவு நிறைந்துள்ளது. அதனால் தான், பண்டைய காலங்களில் இருந்து கிராம்பு உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆதலால், ஒருவர் தினமும் சில கிராம்புகளை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | சூப்பர் காய் சுரைக்காய்: சம்மரை கூலாய் கழிக்க சூப்பரா உதவும் சுரைக்காய் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR