குழந்தைப் பருவத்தில், வீட்டில் தாத்தா, பாட்டி, பெற்றோர் சியவன்பிராஷ் சாப்பிடுவதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். சில சமயங்களில் அவர்கள் அதை சாப்பிடும்படி உங்களை கட்டாயப்படுத்தியிருக்கலாம். சுவையில் அவ்வளவு சிறந்ததாக இல்லை என்றாலும், சியாவன் பிராஷ் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு சஞ்சீவியை போன்றது எனலாம். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில், தொற்றிலிருந்து உங்களை காக்கும் கவச லேகியம் எனலாம். இந்த கொரோனா காலத்தில், நோய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சியாவன்பிராஷ் லேகியத்தை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனினும் சில உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சியாவன்பிராஷை எந்தெந்த மக்கள் சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்:


சர்க்கரை நோயாளிகள்:


சர்க்கரை நோயாளிகள் தவறுதலாக கூட சியாவன்பிராஷ் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், சியாவன்பிராஷின் சுவையை சமன் செய்ய, இனிப்பு அதில் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சயவன்பிராஷில் உள்ள சர்க்கரை, உடலின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.வ்அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்து, சயவன்பிராஷை உட்கொண்டால், கவனமாக இருங்கள், ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம்.


சிறுநீரக நோயாளிகள்:


சியவன்பிராஷ் உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது. மேலும் ஜீரணிக்க கடினமாக உள்ளது. எனவே நீங்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் தவறுதலாக கூட சியவன்பிராஷை உட்கொள்ளக்கூடாது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு மெல்லக் கொல்லும் விஷம்! எச்சரிக்கும் நிபுணர்கள்!


வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள்


வயிற்றில் பிரச்சனை உள்ளவர்கள் சயவன்பிராஷை உட்கொள்ளக்கூடாது. ஏனென்றால் சயவன்பிராஷை ஜீரணிப்பதில் சில சிரமங்கள் இருக்கலாம். அதனால்தான் தவிர்க்க வேண்டும்.


உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள்:


நீங்கள் உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளியாக இருந்தால், நீங்கள் சியவன்பிராஷை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் சியாவன்ப்ராஷ் உடலுக்கு சூட்டை கொடுக்கும் லேகியமாகும், இதன் காரணமாக இந்த பிரச்சனை அதிகரிக்கலாம்.


சியவன்பிராஷ் சாப்பிடுவதற்கான சரியான முறை


சியாவன்பிராஷ் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து தான். அதனால் நீங்கள் அதை அதிக அளவில் சாப்பிடக்கூடாது. அதனால், அஜீரணம், வாய்வு, வயிற்று உப்புசம், வயிற்று போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். பெரியவர்கள் தினமும் 1 டீஸ்பூன் சியவன்பிராஷை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் காலை மற்றும் மாலையில் எடுத்துக் கொள்ளலாம். தினமும் குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் சியாவன்பிராஷ் கொடுக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


மேலும் படிக்க | கருவளையங்கள் அழகை கெடுக்கிறதா... மாயமாய் நீக்க ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!


(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Omicron: சீனாவில் மீண்டும் ஒமிக்ரான் கோவிட் பீதி! இந்தியாவிலும் பரவும் கொரோனா பதற்றம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ