உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்: பிஸியான வாழ்க்கையில் பல வகையான நோய்கள் மக்களை ஆட்கொள்கின்றன. High Blood Pressure, அதாவது உயர் இரத்த அழுத்தம் கூட இதே போன்ற நோயாகும்.  இது மெதுவாக உடலில்  சிறுநீரக பாதிப்பு, டிமென்ஷியா மற்றும் மாரடைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஒரு ஆரோக்கியமான நபரின் இரத்த அழுத்தம் அதிகபட்சமாக 140/90 mmHg வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரத்த அழுத்தம் இதை விட அதிகமாக இருந்தால், ஒரு நபருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. கீழே குறிப்பிட்டுள்ள 5 விஷயங்கள் காரணமாக உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வலி நிவாரணி மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு


பெரும்பாலானோருக்கு சிறிய அளவிலான வலிகளுக்கும் கூட வலி நிவாரணிகளை சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதுபோன்ற மருந்தை எப்போதாவது சாப்பிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் நீங்கள் அதை வழக்கமாக்கினால், அது உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே வலி நிவாரணிகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது.


பதப்படுத்தப்பட்ட உணவு


பெரும்பானோர் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர். அலுவலகங்களில்  வேலை செய்பவர்கள் நேரமின்மை காரணமாக இவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஆன்லைனில் ஆர்டர் செய்து கிடைக்கும் பேக் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ள ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. இந்த வகை உணவுகளில் அதிக அளவு உப்பு அதாவது சோடியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இரத்தத்தில் அதிக அளவு உப்பு இருந்தால், அது உடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சத் தொடங்குகிறது, இது இரத்த நாளங்களை பாதிக்கிறது. எனவே, முடிந்தவரை சுத்தமான வீட்டில் சமைத்த உணவையே உட்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!


உடலில் வைட்டமின் டி குறைபாடு


உடலில் வைட்டமின் டி இல்லாததால் முடி உதிர்தல் மற்றும் எலும்புகள் வலுவிழந்துவிடும். இருப்பினும், வைட்டமின் டி குறைபாடு உயர் இரத்த அழுத்த அபாயத்தையும் அதிகரிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. எனவே, உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மாரடைப்பு அபாயத்தைத் தவிர்க்கவும், இன்றிலிருந்தே வைட்டமின் டி நிறைந்த உணவை உட்கொள்ளத் தொடங்குங்கள்.


தனிமை


சமூகத்தில் அதிகரித்து வரும் தனிமை மக்களிடையே எரிச்சலையும் உயர் இரத்த அழுத்தத்தையும் அதிகரித்து வருகிறது. இது மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் அதிகரிக்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, சமூக நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்துவது மிகவும் அவசியம். தனிமையில் இருப்பதால், ஒரு நபர் மன அழுத்தத்திற்கு ஆளாகி, படிப்படியாக விரக்தியில் மூழ்கி விடுகிறார்.


ஒரு நாளைக்கு 7-8 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம்


உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் 7-8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம். இதை விட குறைவாக உறங்கினால், நோய் வருவதற்கு நேரடியாக அழைப்பு விடுக்கிறீர்கள் என அர்த்தம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால், உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். இது இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இதயத் தடுப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ