இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மசாலாப் பொருட்கள்: இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. பெரும்பாலும் இது நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையின் காரணமாக உருவாகிறது. நீரிழிவு நோய் வருவதற்கு 2 காரணங்கள் உள்ளன. முதலாவது நமது வாழ்க்கை முறை, இரண்டாவது நமது மரபணு. அதனால்தான் ஒரு நீரிழிவு நோயாளி தனது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவ்வாறு செய்யாவிட்டால், உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களைக் கொண்டும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சில மசாலா பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை பயன்படுத்து நீரிழிவு நோயை எளிதாக கட்டுக்குள் வைக்கலாம். 


இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மசாலா பொருட்கள்


இலவங்கப்பட்டை


ஒரு பாத்திரத்தில் இலவங்கப்பட்டையை போட்டு நன்கு கொதிக்க வைத்து இலவங்கப்பட்டை தேநீர் தயாரிக்கவும். பிறகு வடிகட்டி அதை பருகவும். இலவங்கப்பட்டை ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஆகையால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. 


மேலும் படிக்க | டயட்ல இருக்கீங்களா? ஜாக்கிரதை!! இந்த பக்க விளைவுகள் உங்களை பாதிக்கலாம்


இது தவிர, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இதில் உள்ளன. ஆகையால் இலவங்கப்பட்டை டைப்-2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.


வெந்தய விதைகள்


வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். கார்போஹைட்ரேட் உறிஞ்சும் பண்பு வெந்தய விதைகளில் உள்ளது. இதன் காரணமாக உங்கள் செரிமானம் சீராகிறது. 


இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனுடன், உங்கள் இதயத்தின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். மேலும் வெந்தய விதைகளால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது.


இஞ்சி


இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி அல்லது நசுக்கி, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து தேநீர் தயாரிக்கவும். அதன் பிறகு நீங்கள் அதை குடிக்க வேண்டும். இஞ்சி டீ குடிப்பதன் மூலம், உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் இதை செய்தால் ரத்த சர்க்கரை அளவு சீராகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ