உடல் எடையை குறைக்கும் ஸ்பெஷல் தண்ணீர்: நீங்கள் உடல் எடையை குறைக்க நினைக்கும் போதெல்லாம், ​​இதற்காக பலவித முயற்ச்சிகளை மேற்கொள்வீரகள். சில நடவடிக்கைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கலாம், சிலவை  தோல்வியுற்றிருக்கலாம். இருப்பினும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது எடையைக் குறைக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது தவிர, உங்கள் உணவு மற்றும் குடிப்பழக்கங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் இரவில் பானங்கள் குடிப்பது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க, நீங்கள் இரவில் இந்த (இஞ்சி-கிராம்பு) தண்ணீரை தினமும் உட்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஞ்சி-கிராம்பு தண்ணீரைத் தயாரிக்க, முதலில் இஞ்சியை நன்கு கழுவவும். இப்போது இஞ்சி மற்றும் எலுமிச்சையை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். அதன் பின்னர் ஒரு கடாயை எடுத்து அதில் 10 முதல் 12 கிராம்பு, புதினா இலைகள் மற்றும் நறுக்கிய இஞ்சி துண்டுகளை போடவும். மேலும், 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைக்கவும். பின்னர் தண்ணீரை 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். உங்கள் இஞ்சி-கிராம்பு தண்ணீர் தயார். தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் இந்த நீரை தேநீர் போல் பருகவும்.


மேலும் படிக்க | உடல் கொழுப்பை எரிக்க.... சூப்பரான ‘5’ காலை உணவு ரெஸிபிக்கள்!


இஞ்சி-கிராம்பு தண்ணீரின் நன்மைகள்
வைட்டமின் சி நிறைந்த இந்த ஸ்பெஷல் தண்ணீரில் எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது. இது உடல் எடையை குறைக்க உதவும். மேலும், கிராம்பு தண்ணீரின் சுவையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. தொண்டை புண் இருந்தால் கிராம்புகளின் கடுமையான சுவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இதனால் இது எடையைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, தண்ணீரில் பயன்படுத்தப்படும் இஞ்சி உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது. இது செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது மற்றும் பசியை அமைதிப்படுத்த உதவுகிறது. பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் புதினா இலைகளில் காணப்படுகின்றன, எனவே இது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.


கிராம்பு இஞ்சி மற்றும் எலுமிச்சையின் நான்கு நன்மைகள்


1- கிராம்பு, இஞ்சி மற்றும் எலுமிச்சை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம்.


2- கிராம்பு இஞ்சி மற்றும் லெமன் டீயை தவறாமல் உட்கொண்டால், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.


3- எலுமிச்சையில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது, இது தமனிகள் மற்றும் நரம்புகள் வழியாக சரியான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும் மற்றும் இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுக்கவும் உதவுகிறது. இதனுடன், கிராம்பு மற்றும் இஞ்சியில் காணப்படும் பண்புகள், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.


4- இஞ்சி, கிராம்பு மற்றும் எலுமிச்சை மூன்றும் நமது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் பருமனா? மோருடன் இதை கலந்து குடிங்க... ஓவர் வெயிட் பிரச்சனை 'நோ மோர்'


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ