பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏராளமான சத்தான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே நாம் சாப்பிட ஆரம்பிக்கும் போது பிரச்சனை தொடங்குகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டும் உண்பது எப்படி ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மட்டுமல்ல, பாரம்பரிய காலங்களிலிருந்து, பழங்கள் மற்றும் காய்கறிகள் பல நோய்களைக் குணப்படுத்துவதற்கும் எடையைக் குறைப்பதற்கும் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகின்றன. இன்றைய சமூக ஊடகங்களில் கூட, நல்ல ஆரோக்கியத்திற்காக காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் பலர் இதை அன்றாட வாழ்க்கையில் சேர்த்து பயன் பெற்று வருகின்றனர்.


அன்றாட வாழ்க்கையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் உட்கொள்வது உங்கள் உடலில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது, உங்கள் எடையும் குறையும் மற்றும் நீங்கள் அழகாகவும், டிரிம் ஆகவும் இருப்பீர்கள். ஆனால், பழங்களை மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் சில நாட்களில் உடல் ஆரோக்கியத்தில் எதிரொலிக்கத் தொடங்கிவிடும்.


மேலும் படிக்க | இதயத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தும் கால்கள் & பாதங்கள்! மாரடைப்பை காட்டும் அறிகுறிகள்


பழங்களை மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட ஆரம்பிக்கும் போது பிரச்சனை தொடங்குகிறது. ஒருவர் எப்பொழுதும் சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும், அதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அனைத்து சத்துக்களையும் கொண்ட சமச்சீர் உணவு உடலுக்கு தேவையானது.


சமச்சீர் உணவு 


ஆனால் பழங்களை மட்டுமே சாப்பிடுவதால், உடலின் தசைகள் பலவீனமடையத் தொடங்குகின்றன, மேலும் மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் குறைபாடுகளும் உடலில் ஏற்றத்தாழ்வை உருவாக்குகின்றன. ஏனெனில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் நமது உடலுக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரதச்சத்து இல்லை. ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் முக்கியம்.


மேலும் படிக்க | ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ‘இந்த’ 5 பழங்களை தோலுடன் உண்டால் டயபடீஸ்க்கு குட் பை சொல்லலாம்
 
சரிவிகித உணவு என்றால் என்ன?
சமச்சீர் உணவு என்பது வைட்டமின்கள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை சீரான அளவில் கொண்டிருக்கும்  உணவைக் குறிக்கிறது. இவையெல்லாம் பழங்கள் அல்லது காய்கறிகளில் மட்டும் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் போதுமான அளவில் கிடைப்பதில்லை.


உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் நம் உடலில் சீரான அளவில் இருக்க வேண்டுமானால், தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், பச்சை காய்கறிகள், கோழி, பருப்புகள், பீன்ஸ், பால் பொருட்கள் போன்ற உணவுகளை நம் அன்றாட வாழ்வில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | எச்சரிக்கை! குடலை காலி செய்யும் சில ஆபத்தான உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ