நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு, அவர்கள் என்ன சாப்பிட வேண்டும்?, எதைச் சாப்பிடக்கூடாது? என்பதில் எப்போதும் சிக்கல் உள்ளது. கோடையில் சீசனில் மாம்பழங்கள் அதிகம் கிடைக்கும். இந்த நேரத்தில் மாம்பழம் சாப்பிடுவது சரியாகுமா?  என்பது சர்க்கரை நோயாளிகளின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் மாம்பழம் இனிப்பாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மத்தியில் இது தங்களுக்கு ஏற்ற பழமா? என்ற சந்தேகம் எழுவது இயல்பு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை குறைந்த அளவில் உட்கொள்ளலாம் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. ஊட்டச்சத்து தரவுகளின்படி, ஒவ்வொரு மாம்பழத்திலும் (சுமார் 100 கிராம்) 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே, ஒரு துண்டு மாம்பழம் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம், இது நிலைமையை மோசமாக்கும்.


மேலும் படிக்க | வெறும் 1 டீஸ்பூன் இந்த எண்ணெய் போதும்..முடி அடர்த்தியா வளரும்


மாம்பழம் இரத்த சர்க்கரையை பாதிக்குமா?


நீரிழிவு நோயாளிகளின் பொதுவான கேள்விகளில் ஒன்று, அவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா என்பதுதான். பதில் ஆம், ஆனால் மாம்பழத்தை குறைந்த அளவில் சாப்பிடுலாம். ஒன்று அல்லது இரண்டு மாம்பழ துண்டுகள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. மாம்பழம் ஆரோக்கியமானது, ஆனால் மற்ற பழங்களைப் போலவே, அவை கார்போஹைட்ரேட்டுகளையும் கொண்டிருக்கின்றன. கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன.


ஆனால், மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து சர்க்கரையை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதாவது மாம்பழம் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். மேலும், மாம்பழம் நல்ல ஊட்டச்சத்து மதிப்பு, குறைந்த கிளைசெமிக் சுமை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஒரு பழம் என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்?


1. நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், முழு பழுத்த மாம்பழத்தை ஒப்பிடும் போது, ​​சிறிது பழுக்காத மாம்பழத்தை சாப்பிடுங்கள். கனியாத மாம்பழத்தில் அதிக சர்க்கரை காணப்படுவதில்லை. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.


2. மாம்பழத்துடன் தயிர், பனீர் அல்லது மீன் போன்ற புரத மூலங்களைச் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.


3. மாம்பழச் சாற்றில் சர்க்கரை கலந்து குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். எனவே, நீங்கள் மாம்பழச் சாறு குடித்தால், எச்சரிக்கையுடன் குடிக்கவும், சர்க்கரையுடன் கலக்க வேண்டாம்.


4. மாம்பழம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மாம்பழத்தை அதிகமாக சாப்பிடுவதும் நீங்கள் எடுக்கும் இன்சுலின் அளவைக் குறைக்கலாம்.


5. மாம்பழத்தை வெட்டிய பின் சாப்பிடக் கூடாது. மாம்பழத்தை வெட்டுவதால் அதில் காணப்படும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம். எனவே, மாம்பழத்தை உறிஞ்சி சாப்பிடுங்கள்.


6. சர்க்கரை நோயாளிகள் காலை நடைப்பயிற்சிக்குப் பிறகு, உடற்பயிற்சிக்குப் பிறகு, உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் மாம்பழங்களைச் சாப்பிடுவதே சிறந்த நேரம். உணவுக்கு இடையில் மாம்பழம் சாப்பிடுவது நல்லது என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள், ஏனெனில் அந்த நேரத்தில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்காது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடை உடனே குறைய வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க: ஆச்சரியப்படுவீங்க!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ