சிறுதானியங்களில் முக்கியமான ஒன்று ராகி. கேழ்வரகு, ஆரியம், கேப்பை எனவும் பல பெயர்களால் அழைக்கப்படும் ராகியின் சத்துக்களோ அபாரம், விலையோ மிகவும் குறைவு. ஆரோக்கியக் குறைபாடுகளை தள்ளுபடி செய்ய வேண்டுமானால், ராகியை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலுக்கு மாற்றாக ராகி மால்ட் பயன்படுத்தப்படுகிறது. ராகியை நீரில் ஊறவைத்து அதில் இருந்து எடுக்கப்படும் பாலின் சக்தி, மாட்டுப் பாலில் உள்ள சத்துக்களுடன் போட்டிபோடுவது.


ராகியில் இருக்கும் அதிக அளவிலான கால்சியம் எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. கோடை காலத்தில் கேழ்வரகை சாப்பிட்டால்  உடல் சூட்டைத் தணித்து, குளிர்ச்சியாக வைத்திருக்கும். புரதச்சத்துக்களும் கனிமச் சத்துக்களும் நிறைந்துள்ள ராகியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், தொப்பை உள்ளவர்களின் தொப்பை முழுக்க கரைந்து, தட்டையான வயிறைப் பெறலாம்.


ராகியில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம், பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. உடலில் சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும்  கேப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியம் சத்து அதிகம் நிறைந்து இருக்கும் கேழ்வரகு எலும்புகளை வலுப்படுத்தும்.  


Also Read | சிறுதானியங்களின் முடிசூடா மன்னன் கம்பு, நோய்களுக்கு இது தரும் வம்பு


நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் ராகி. இதிலுள்ள, தாவர வகை ரசாயன கலவைகள் (Phytochemical Compounds) சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids), கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, உடலில் படியும் தேவையற்ற கொழுப்பின் அளவை குறைக்கிறது.


ராகியில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகை நோயை குணப்படுத்துகிறது. ராகியை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், உடலின் சூடு பராமரிக்கப்படும்.  உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா நோய்களை குணப்படுத்தும் கேப்பை. தினசரி ஒரு கோப்பை கேப்பைப்பால் குடித்து வந்தால், குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும்.


ராகியில் அதிக அளவில் நார்சத்து இருக்கிறது. மலச்சிக்கலால் அவதிப்படுகின்றவர்கள் அடிக்கடி ராகியை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.


தமிழ்நாட்டின் கிராமங்களில் மிகவும் சிறப்பான உணவுகளில் ஒன்று களி. களிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ராகிக் களி. ராகிக் களியை தினசரி காலை உணவாக உண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது.


Also Read | Vitamin D எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸ் அபாயம் குறையுமா? உண்மை இதுதான்…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR