மா இலைகளின் பயன்கள்: கோடைகாலம் என்றாலே அது இனிமையான மாம்பழங்களின் காலமாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் மாம்பழங்களுக்காகவே கோடைகாலத்துக்காக காத்திருக்கிறார்கள். இந்த சீசனில், மக்கள் பல வகையான மாம்பழங்களை ருசிப்பார்கள். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் மாம்பழங்கள் மட்டுமல்லாமல் மா இலைகளிலும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுப நிகழ்ச்சிகளில் மா இலைகள் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் மா இலைகளை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்தும் விடுபடலாம் என்பது பலருக்குத் தெரியாது. இந்த இலையில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட்ட் பண்புகளும் உள்ளன. மா இலைகளில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ உள்ளது. மாங்காயை தவிர, மாங்காய் இலைகளினால் ஏற்படும் நன்மைகள், எந்தெந்த நோய்களில் இதனால் நன்மை கிடைக்கும் என பல விஷயங்களைப் பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.  


இந்த கோடையில், மாம்பழம் மட்டுமல்ல, அதன் இலைகளையும் சுவைக்கலாம்


- மாம்பழ இலைகளில் ஃபிளாவனாய்டு மற்றும் பீனால் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன.


- இவற்றின் காரணமாக இரத்த நாளங்களை வலுப்படுத்த இது உதவுகிறது. 


- இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மா இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


- மேலும், மா இலைகளில் அந்தோசயனிடின் என்ற டானின் உள்ளது. இதன் காரணமாக இந்த இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். 


- இதனை உட்கொள்ள, மா இலைகளை உலர்த்தி பொடி செய்து தினமும் உட்கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க 2 ரூபாய் இருந்தா போதும்


- இதனை தினமும் உட்கொண்டால், சில நாட்களில் பல நன்மைகளை காண்பீர்கள். 


- சர்க்கரை நோயாளிகளுக்கும் மாங்காய் தண்ணீர் நல்லது.


மா இலைகள் நீரிழிவு முதல் வயிற்று பிரச்சனை வரை அனைத்துக்கு நல்லது


- உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு மா இலைகள் நன்மை பயக்கும். 


- உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மா இலைகளுக்கு உண்டு. 


- இதற்கான மருந்து உட்கொள்பவர்களுக்கு இது சிறந்த சிகிச்சையாகும். 


இதை எப்படி பயன்படுத்துவது?


மா இலைகளை முதலில் நன்றாக சுத்தம் செய்து நீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதை ஒரு கஷாயமாக தயார் செய்யவும். இந்த கஷாயத்தை தினமும் உட்கொள்ளுங்கள். இந்த கஷாயம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. 


வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு மா இலைகள் உதவுகின்றன. மா இலைகளை இரவில் ஊறவைத்துவிட்டு, காலையில் அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் பெறலாம். மா இலைகள் சிறுநீரக கற்களை அகற்றவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உங்களுக்கு மூட்டு வலியா? அப்போ தினமும் இந்த அற்புதமான தேநீர் குடிங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ