புகையிலை என்பது ஒரு வகையான தாவரமாகும், புகைபிடிப்பதற்கு இந்த இலைகள் தான் புகைபிடிக்க பயன்படுகின்றது.  புகையிலையில் நிகோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது ஒரு போதைப்பொருளாகும். இந்த போதை பொருளை நாம் பயன்படுத்துவதால் நமது உடலில் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது.  புகைப்பிடிப்பதால் பல்வேறு ஆபத்தான விஷயங்களும் நமது உடலுக்கு ஏற்படுகிறது.  புகைபிடித்தல் சுவாச அமைப்பு, இரத்த ஓட்ட அமைப்பு, இனப்பெருக்க அமைப்பு, தோல், கண்கள் போன்றவற்றில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.  இதன் காரணமாக தான் புகைபிடித்தல் ஒரு கெட்ட பழக்கமாக கருதப்படுகிறது மற்றும் புகைபிடித்தல் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தும்.  புகையிலையை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சோயா பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!



சிகரெட்டுகளுக்குப் பதிலாக சுருட்டுகள், குழாய்கள் மற்றும் ஹூக்காக்களை பயன்படுத்தினால் பாதிப்பு குறையும் என்று சிலர் நினைக்கின்றனர், ஆனால் அது தவறானது.  புகையிலையை எந்த வடிவில் பயன்படுத்தினாலும் அது உடலுக்கு தீங்கினை விளைவிக்கும்.  புகைபிடிப்பதால் அதிகளவில் பாதிக்கப்படுவது நமது உடலின் முக்கிய உறுப்பாக இருக்கும் நுரையீரல் தான்.  புகைப்பிடிக்கும்பொழுது நச்சு புகைகள் நமது நுரையீரலுக்குள் சென்று நுரையீரலின் சுவர்களில் நிகோடின் படிகிறது.  இதன் காரணமாக நாள்பட்ட நுரையீரல் அடைப்புக் கோளாறு உருவாகி ஆபத்து அதிகரிக்கிறது.  புகைப்பிடிப்பதால் இதயம், இரத்த நாளங்கள் மற்றும் இரத்த அணுக்களுக்கு மிகப்பெரியளவில் பாதிப்பு ஏற்படும்.  சிகரெட்டில் உள்ள ரசாயனங்கள் மற்றும் தார், இரத்தக் குழாய்களில் பிளேக் படிவதற்கு வழிவகுக்கும் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.  இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்பட கூட வாய்ப்புள்ளது.


புகைபிடித்தல் பெண்களின் இனப்பெருக்க அமைப்பை சேதப்படுத்தும், இதனால் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படும்.  சிகரெட் மற்றும் பிற சிகரெட்டுகளில் உள்ள புகையிலையால் ஹார்மோன்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.  புகைபிடித்தல் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும், இதனால் பல்வேறு நோய்கள் வரக்கூடும்.  புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய்களின் அபாயம் அதிகரிக்கும், புகைபிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது புகைபிடிப்பவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோயின் ஆபத்து மூன்று மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | உடல் எடை குறைய அரிசி உணவை தவிர்க்க வேண்டுமா... நிபுணர்கள் கூறுவது என்ன!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ