புற்றுநோய் எச்சரிக்கை அறிகுறிகள்: புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாகும். அதன் அறிகுறிகள் பொதுவாக நிலைமை மோசமடைந்த பிறகுதான் தெளிவாகத் தெரியும். அதன் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது பலருக்கு கடினமாக உள்ளது. புற்றுநோயின் பெரும்பாலான அறிகுறிகள் பொதுவான பிரச்சனைகளைப் போலவே தோன்றும். ஆகையால் நம்மால் அவற்றை சரியான நேரத்தில் அடையாளம் காண முடிவதில்லை. எனினும், பலர் சிறிய அறிகுறிகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு சரியான நேரத்தில் சிகிச்சை பெறுகிறார்கள். இதனால் அவர்கள் அதன் பெரிய அபாயத்திலிருந்து தப்பித்து விடுகிறார்கள். சிலர் இதை செய்யத் தவறி விடுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

18 முதல் 24 வயதுடைய இளைஞர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானவர்களே புற்றுநோயின் ஐந்து பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளை சரியாக அடையாளம் காண்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. புற்றுநோய்க்கான 5 அறிகுறிகளை கண்டால், உடனடியாக மருத்துவரை பரிசோதிக்க வேண்டியது மிக அவசியமாகும். 


இளைஞர்கள் பெரும்பாலும் புற்றுநோயின் அறிகுறிகளை சரியாக அறிந்திருப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கிறார்கள். ஆனால், அவற்றை சரியான நேரத்தில் அடையாளம் காண்பது மிக முக்கியமாகும். கட்டிகள் மற்றும் வீக்கம் ஆகியவை 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே பொதுவாக அறியப்பட்ட புற்றுநோயின் அறிகுறிகளாகும். 


இளம் வயதில் வரும் புற்றுநோயின் 5 பொதுவான அறிகுறிகள்


1. கட்டி மற்றும் வீக்கம்


உடலில் எங்காவது கட்டியோ அல்லது தேவையற்ற வீக்கமோ இருந்தால், அதை உடனே சென்று பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகும். மார்பகங்களில் அல்லது விரைகளில் ஏதேனும் கட்டி இருக்கிறதா என்றும் அவ்வப்போது பார்க்க வேண்டும். கட்டிகளைக் கண்டறிவதற்கான சிறந்த வழி, குளிக்கும்போது உங்கள் உடலைச் சரியாகப் பரிசோதிப்பதாகும்.


2. மச்சம்


அனைவரது உடலிலும் மச்சம் இருப்பது சகஜம். ஆனால் பல நேரங்களில் இந்த மச்சங்கள் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மச்சம் புற்றுநோய் செல்களுக்கு அடைக்கலம் தரக்கூடியது. உங்கள் உடலில் அளவு, வடிவம், நிறம், இரத்தப்போக்கு, அரிப்பு போன்ற ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கண்டால், அதை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உடனடியாக மருத்துவரை அணுகவும்.


மேலும் படிக்க | Onion Benefits: தினம் ஒரு பச்சை வெங்காயம்...பிளட் சுகர் நார்மலா இருக்கும்


3. எடையில் திடீர் மாற்றம்


நீங்கள் துரித உணவை தவிர்த்து வந்தாலோ அல்லது கடுமையாக உடற்பயிற்சி செய்தாலோ எடை இழப்பை பொதுவானதாக கருதலாம். ஆனால் உடல் எடையை குறைக்க நீங்கள் எதையும் செய்யாமல், உங்கள் எடை தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தால் அது கவலைக்குரிய விஷயம். மறுபுறம், எடை வேகமாக அதிகரித்தாலும் அது அபாயம்தான், ஏனெனில் சில கட்டிகள் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆகையால், இந்த சந்தர்ப்பங்களில் கண்டுப்பாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.


4. சோர்வு


புற்றுநோய் வளர உங்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்துகிறது. அப்படி புற்றுநோய் இவற்றை பயன்படுத்தினால், இவை உடல் ஆரோக்கியத்திற்கு பங்களிக்காது. ஆகையால், அதிக சோர்வை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். 


5. தொடர்ச்சியான வலி


உடலின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அது உடலில் உள்ள ஏதோ ஒரு அசவுகரியத்தை நமக்கு குறிக்கிறது. வயதுக்கு ஏற்ப வலி ஏற்படுவது இயல்பானது. ஆனால் உடலில் எங்கேனும் விவரிக்க முடியாத, காரணம் இல்லாத தொடர் வலி இருந்தால், அது ஒரு தீவிர உடல் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இந்த உணவை கண்டிப்பாக சேத்துக்கோங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ