1) உணவை நன்கு மென்று சாப்பிடுவதாலும் உடல் எடை குறையும் என்றால் நம்பமுடிகிறதா? ஆம், உண்மைதான் நாம் உணவை முழுமையாக மெல்லும்போது தானாகவே மெதுவாக சாப்பிட தொடங்குவோம், இப்படி சாப்பிடும்போது நாம் உண்ணக்கூடிய உணவின் அளவு குறைகிறது, வயிறு சீக்கிரமே முழுமையடைந்த உணர்வை அடைகிறது.  மெதுவாக சாப்பிடுபவர்களை விட வேகமாக சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.  எனவே, மெதுவாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க ஒரு எளிய வழி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2) புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நமது உடலுக்கு ஆற்றலை தருவதோடு, நம்மை நீண்ட நேரத்திற்கு பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது.  இது முழுமையாக உணர வைக்கவும், பசியைக் குறைக்கவும், குறைவான கலோரிகளை உண்ணவும் உதவுகிறது.  புரோட்டீன் கிரெலின் மற்றும் ஜிஎல்பி-1 உட்பட பசி மற்றும் முழுமையில் பங்கு வகிக்கும் பல ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கோழி, மீன், தயிர், பருப்பு, குயினோவா மற்றும் பாதாம் ஆகியவை புரோட்டீனின் சிறந்த ஆதாரங்களாக விளங்குகிறது.


மேலும் படிக்க | ஓவரா எடை ஏறினாலும் ஒய்யாரமா குறைக்கலாம்: இந்த சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்


3) நமது உணவின் மூலமே குறிப்பிடத்தக்க எடையை நம்மால் குறைக்க முடியும், ஆரோக்கியமற்ற உணவுகளை உங்களால் பார்க்க முடியாத இடத்தில் வைப்பது நல்லது.  அதிக கலோரி உள்ள உணவுகள் யார் வீட்டில் அதிகமாகக் காணப்படுகிறதோ அந்த வீட்டில் இருப்பவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தை விடுத்து இனிமேல் ஆரோக்கியமான உணவுகளை உண்ணத்தொடங்குங்கள்.


4) நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது மனநிறைவை அதிகரிக்கிறது, இது நீண்ட காலத்திற்கு உங்கள் வயிற்றை முழுமையாக உணர செய்ய உதவுகிறது.  பிசுபிசுப்பு வகையை சேர்ந்த நார்சத்து உணவுப்பொருட்களை சாப்பிடுவது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது உங்களை முழுமையாக உணரச்செய்வதோடு, உணவு உட்கொள்ளலைக் குறைக்கிறது.  பிசுபிசுப்பு ஃபைபர் தண்ணீருடன் சேரும்போது ஒரு ஜெல்லை உருவாக்குகிறது, இந்த ஜெல் ஊட்டச்சத்து உங்கள் வயிற்றை காலியாக்குவதை மெதுவாக்குகிறது.  பீன்ஸ், ஓட்ஸ் தானியங்கள், பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ், அஸ்பாரகஸ், ஆரஞ்சு மற்றும் ஆளி விதைகள் போன்ற தாவர உணவுகள் இந்த வகை நார்சத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.


5) தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நீங்கள் குறைவாக சாப்பிடலாம் மற்றும் எடையைக் குறைக்கலாம், குறிப்பாக உணவு உண்பதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லது.  பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அரை லிட்டர் (17 அவுன்ஸ்) தண்ணீர் குடிப்பதால் பசி குறைகிறது மற்றும் கலோரி உட்கொள்ளல் குறைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.  


6) பொதுவாக நாம் அதிக அளவு உணவை உட்கொள்ளும் போது, ​​அது நமது வயிற்றின் அளவை அதிகரிக்கிறது.  வயிற்றின் அளவு பெரிதாவதால் நாம் அதிகப்படியான உணவை உண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது,  இது இயற்கையாகவே ஒருவரின் எடையை அதிகரிக்கிறது.  இதனால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படும் என்பதால் உணவை சிறிய பகுதிகளாக சாப்பிட முயற்சி செய்ய வேண்டும்.


7) டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது அல்லது கணினியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது சாப்பிடும்போது நாம் எவ்வளவு உணவை சாப்பிட்டோம் என்பதை சரியாக கணிக்க முடியாமல் போகலாம்.   சில சமயங்களில் இதனால் நாம் அதிகமாக சாப்பிட நேரும், இது நமது உடல் எடையில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்திவிடும்.  உணவு உண்ணும் போது கவனச்சிதறல் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் 10% அதிகமாக சாப்பிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  சாப்பிடும்போது நமது கவனம் வேறு எங்காவது இருந்தால் மற்றவர்களை விட 25% கூடுதலாக நாம் கலோரியை உட்கொள்ள நேரிடும்.


8) இன்றைய காலகட்டத்தில் பணிச்சூழல், குடும்ப சுமை போன்ற பல காரணங்களால் மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.  பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக மக்கள் போதுமான அளவு தூங்காமல் இருக்கின்றனர், இதனால் மன அழுத்தம் அதிகரிக்கிறது.  மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை உடல் எடை அதிகரிப்பு மற்றும் உணவு உண்பதில் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.  தூக்கமின்மை பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களான லெப்டின் மற்றும் கிரெலின் ஆகியவற்றை சீர்குலைக்கலாம்.  மன அழுத்தத்தின் காரணமாக உடலில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிக்கலாம், இதுபோன்ற  ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உங்கள் பசியையும், உணவின் மீதான ஆர்வத்தையும் அதிகரிக்கும், குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவின் மீது உங்களுக்கு நாட்டம் ஏற்பட்டு அதிக கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும்.


9) உடல் எடையை அதிகரிப்பதில் சர்க்கரை முக்கியமான ஒன்றாக இருக்கிறது, சோடா போன்ற சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள் பல நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.  இதுபோன்ற சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை குடிக்கும்போது அதிகப்படியான கலோரிகள் நமது உடலில் சேர்ந்துவிடுகிறது.  சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை பலரும் விரும்பி குடிக்கின்றனர், பலரும் கோடைகாலத்தில் இதுபோன்ற பானங்கள் மீது அதிக நாட்டம் கொள்கின்றனர்.  சர்க்கரை பானங்கள் எடை அதிகரிப்பு மற்றும் பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.  எனவே இதுபோன்ற அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை தவிர்த்துவிடுவது நல்லது.


மேலும் படிக்க | காலை எழுந்தவுடன் முதலில் தண்ணி குடிங்க: நம்ப முடியாத நன்மைகள் நடக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ